தற்போதைய உணவு முறைகள், செயற்கை அழகுப் பொருள்களின் பயன்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ப பெண்கள் பலருக்கு இளம் வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்படுகிறது. இதற்கும் அழகு நிலையங்களை நாடாமல், இயற்கையாகவே வெகு விரைவில் வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே தீர்வு காண முடியும்.
► சாதாரணமாக உணவில் கேரட், முட்டைகோஸ், தக்காளி ஆகியவற்றை சேர்த்துக்கொண்டால் முகச்சுருக்கம் வராது.
► பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள், பழங்கள், திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பழச்சாறு, இளநீர் போன்றவற்றை தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
► முகச்சுருக்கம் வந்தபின்னரோ அல்லது முகச்சுருக்கம் வரமால் தடுக்கவோ உங்கள் தோல் தன்மைக்கு ஏற்றவாறு கீழ்க்கண்ட குறிப்புகளை பயன்படுத்தலாம். முகம் பொலிவு பெற, முகத்தில் கருமை மறையவும் இதனை பின்பற்றலாம்.
► பப்பாளி, தக்காளி ஆகியவற்றை மசித்து முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதேபோன்று வாழைப்பழம், கேரட் சாறு ஆகியவற்றையும் முகத்தில் தடவலாம்.
► தேன் அல்லது பாலுடன் சிறு துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
► ஆலிவ் ஆயிலை முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து சிறிதளவு கடலைமாவு, மஞ்சள் தூள், கேரட் சாறு கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வைத்திருக்கலாம்.
► வாரத்தில் இருமுறை முகத்தில் கிளிசரின் தடவலாம். அல்லது பசும்பாலுடன் இதனை கலந்து இரவு படுக்கச் செல்லும்முன் முகத்தில் மசாஜ் செய்யலாம்.
► இரவில் ஆலிவ் எண்ணெய் அல்லது கிளிசரினை முகத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்து பயத்தம் மாவு, கடலை மாவு, மஞ்சள் கலவையை முகத்தில் தடவி பின்னர் கழுவலாம். இதனால் முகத்தில் பொலிவு கூடும்.
► அதேபோன்று முட்டையின் வெள்ளைக்கருவுடன் பயத்தம் மாவு, கடலை மாவு இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து முகப்பொலிவுக்கு பயன்படுத்தலாம்.
► பன்னீர், ரோஸ் வாட்டரையும் முகச்சுருக்கம் தவிர்க்க பயன்படுத்தலாம்.