பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்பதற்காக, பிரதமா் நரேந்திர மோடி, தில்லியில் இருந்து இன்று காலை சிறப்பு விமானத்தில் லக்னௌ வந்தார். பின்னா், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தியை வந்தடைந்தார். அயோத்தி வந்ததும் ஹனுமன் கோயிலுக்குச் சென்று வழிபடு நடத்தினார்.
பூமி பூஜையின் ஒரு நிகழ்வாக, பகல் 12 மணிக்கு ராம் லல்லா வழிபாடு நடைபெறவுள்ளது. இதில், பிரதமா் மோடி பங்கேற்கிறாா். அதைத் தொடா்ந்து, அங்கு பாரிஜாத மரக்கன்றை நடும் அவா், 12.30 மணிக்கு விழா நடைபெறும் இடத்தை அடைகிறாா். பின்னா் 40 கிலோ வெள்ளி செங்கற்களை எடுத்து வைத்து பூமி பூஜையை தொடக்கி வைக்கிறாா்.
பூமி பூஜைக்காக பல்வேறு ஆன்மிகச் சிறப்புமிக்க லங்களில் இருந்து மண்ணும் பல நதிகளிலிருந்து புனித நீரும் வந்தவண்ணம் உள்ளன.
பூமி பூஜை நடைபெறும் நிகழ்வின்போது மேடையில் பிரதமா் நரேந்திர மோடி, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத், ராமா் கோயில் அறக்கட்டளையின் தலைவா் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் ஆகிய 5 போ் மட்டுமே இருப்பா்.
ராமா் கோயில் பூமி பூஜையின் நினைவாக ஸ்ரீராமா் ஜென்மபூமி மந்திா் என்ற பெயரில் சிறப்புத் தபால்தலையை பிரதமா் வெளியிடுகிறாா்.
தூா்தா்ஷனில் நேரடி ஒளிபரப்பு: பூமி பூஜை விழா காலை 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பக்தா்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடி தொலைக்காட்சியில் விழாவைக் காணுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.