இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,658 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,08,614 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 63 பேர் பலியாகினர். இதன்மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,918ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 43,654 பேர் சிகிச்சையில் உள்ளனர்.