சென்னை: 2020 - 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்
* 2017 ஆண்டுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் 83.02 சதுர கிலோ மீட்டர் வன நிலப்பரப்பு அதிகரித்துள்ளது.
* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு.
* தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்.
* முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு.
* அரசு ஊழியர்களுக்கு சென்னை நகரில் ரூ.76 கோடியில் புதிய *அடுக்குமாடி குடியிருப்பு
* ராமநாதபுரம், விழுப்புத்தில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ஒப்புதல். ரூ.3041 கோடி மதிப்பில் திட்டங்கள் உருவாக்கப்படும். 60 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட இரண்டு நிலையங்கள் அமைக்கப்படும்.
* உழவர் பாதுகாப்பு திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* 2020-21 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும்.
* தமிழகத்தின் மொத்த வருவாய் ரூ.2,19, 375 கோடி.
* முத்திரை தாள் வரி 1% இருந்து 0.25% ஆக குறைப்பு. குறைந்தபட்சமாக ரூ.5000 மிகாமல் வசூலிக்கப்படும்.
* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.5,500 கோடி.
* புதிதாக 11 மருத்துவ கல்லூரிகலை நிறுவுவற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு.
* மதிய உணவு திட்த்துக்கு ரூ.5,935 கோடி
* புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு பெருந்திட்ட வளாகம் அமைக்க ரூ.550 கோடி ஒதுக்கீடு.
* சிறைச்சாலைகளுக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு.
* உள்ளாட்சிகளுக்கு ரூ.6.754 கோடு ஒதுக்கீடு.
* போக்குவரத்து மானியங்களுக்காக ரூ.110 கோடி ஒதுக்கீடு.
நிர்பயா நிதியின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.75.02 கோடியில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.
அம்மா உணவகத் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
பொருளாதார நெருக்கடிகளை தமிழக அரசு திறமையாக சமாளித்து வருகிறது.
* 525 மின்சார பேருந்துகள் வாங்வதற்காக ரூ.960 கோடி ஒதுக்கீடு.