தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

2020 - 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்


சென்னை: 2020 - 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.


பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் 

 

* சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3% இருந்து 5% ஆக உயர்த்தப்படும்.
* வேலையில்லை இளைஞர்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும். 
* தொழில் முனைவோருக்கான புத்தாக்க திட்டத்தின் கீழ் 500 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படும்.
* சென்னை கோட்டூர்புரத்தில் புதியதாக பொருளியல் பள்ளி அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
* சென்னையில் மாநில திறன் பயிற்சி நிலையம் உருவாக்கப்படும்.  

* 2017 ஆண்டுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் 83.02 சதுர கிலோ மீட்டர் வன நிலப்பரப்பு அதிகரித்துள்ளது.

* 52.01 கி.மீ. நீள வழித்தடங்களுக்கு நிதியுதவி வழங்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல் - விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.
* எரிசக்தி துறைக்கு ரூ.20,115.58 கோடி ஒதுக்கீடு.
* நீர்ப்பாசனத்துறைக்கு 6991 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* மின்னுற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்திற்கு கடந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டத்தில் 50 சதவீதத்தை ஈடுசெய்வதற்கு ரூ.4265.56 கோடி ஒதுக்கீடு.
* உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையக்குதல் திட்டத்திற்கு ரூ.920 கோடி ஒதுக்கீடு.
* கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முகமூடி, 3 அடுக்க முகமூடிகளை அரசு கொள்முதல் செய்து வைத்துள்ளது.
* முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.1033 கோடி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு ரூ.1224 கோடி ஒதுக்கப்படும்.
* தமிழ்நாட்டின் மாநில குடும்பத் தரவு திட்டத்தை செயல்படுத்த ரூ.47.50 கோடி ஒதுக்கீடு.
* 2011-12 முதல் 2019-20 வரை மொத்தம் 715 அறிவிப்புகள்.
* 715 அறிவிப்புகளில் 537 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
* 161 அறிவிப்புகளுக்கு தேவையான ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளன.
* 17 அறிவிப்புகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு.

* தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்க திட்டத்திற்கு ரூ.918 கோடி ஒதுக்கீடு.
* நகராட்சி நிர்வாகம் சார்பில் கடன் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்டப்படும்.
* ரூ.3831 கோடி செலவில் தமிழ்நாடு நீடித்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்.
* தமிழ்நாடு நீடித்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஈரோடு, வேலூர், ஓசூர் மாதிரி நகரங்களாக தேர்வு.
* நகராட்சி, மாநகராட்சிகளில் பாதாளச்சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற ரூ.406 கோடி ஒதுக்கீடு.
* சென்னை பெருநகர மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்த லாபநோக்கமற்ற சிறப்பு நோக்கு முகமை அமைக்கப்படும்.
* சென்னை பொருளியல் பள்ளிக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எனும் அந்தஸ்து வழங்கப்படும்.

* தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும். 

* தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படும். 
* 37 மாவட்டங்களில் தலா இரண்டு வட்டாரங்களில் முதியோர் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். 
* மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 52 கி.மீ தூர மெட்ரோ ரயில் பணிகளை விரைவில் தொடங்கப்படும். 
* கைத்தறிக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு.
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு. 
* தூத்துக்குடி தொழில்பூங்காவின் நீர் தேவையை பூர்த்தி செய்ய, குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க ரூ.634 கோடி ஒதுக்கீடு. 
* மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோாறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.60 லட்சத்திலுருந்து ரூ.5 கோடி உயர்த்தி வழங்கப்படும். 
* கிறிஸ்துவ தேவாலங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். 
* புதிய தொழில் முனைவோருக்கு மூலதன மானியம் ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக அதிகரிப்பு.
* ராமேஸ்வரத்தில் சுற்றுலா வசதியை மேம்படுத்த ரூ.9.80 கோடி ஒதுக்கீடு.
* நடந்தாய் வாழி காவிரி திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு. 
* அத்தியாவசிய உள்கட்டமைப்பு பணிகளை ரூ.500 கோடி செலவில் மேற்கொள்ள ஒருமுறை சிறப்பு திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும். 
* 1,28,463 குடும்பங்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும்.
* கல்லணைக் கால்வாய் திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தின் மூலம் அவசர சிகிச்சை பிரிவு உயிரிழப்பு குறைந்துள்ளது. 
*8.3 %  இருந்த அவசர சிகிச்சை பிரிவு உயிரிழப்பு 2.7 சதவீதமாக குறைந்துள்ளது.
* ஊரக உள்ளாட்சிகளில் முதல்வரின் கிராம தன்னிறைவு வளர்ச்சி திட்டம் என்ற புதிய 5 ஆண்டு தன்னிறைவு திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும். 
* ரூ.25 கோடியில் சிட்லபாக்கம் ஏரி மறுசீரமைக்கப்படும்.
* பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்திற்கான மாநில அரசின் பங்களிப்பு ரூ.724 கோடியாக உயர்த்தப்படும்.
* ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.
* மீனவர்களுக்கான மீன் பிடித்தடைக்கால சிறப்பு நிதி உதவிக்கு ரூ.298 கோடி ஒதுக்கீடு.
* நாகை ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித்துறைமுகம்.
* மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு ரூ.1230 கோடி ஒதுக்கீடு.

 * முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு. 

* கல்வித்துறைக்கு 34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* ஹார்வர்டு, ஹூஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலை கொண்டுவர சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. 
* சென்னை பெங்களூர் தொழில்நுட்பத்திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம்.
* சென்னை - கன்னியாகுமரி இடையே பொருளாதார பெருவழிச்சாலை திட்டம்.
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15850 கோடி ஒதுக்கீடு.
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ரூ.18540 கோடி ஒதுக்கீடு
* திறன்மிகு நகரங்கள் திட்டங்களை செயல்படுத்த ரூ.1650 கோடி ஒதுக்கீடு.
* வரும் நிதி ஆண்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி பயிர்க்கடன்.
* நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5306.95 கோடி ஒதுக்கீடு.
* ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754.30 கோடி ஒதுக்கீடு.
* கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.
* வருவாய் பற்றாக்குறை மானியமாக ரூ.4025 கோடி வழங்க 15வது நிதிக்குழு பரிந்துரை.
* குடிமராமத்து திட்டத்துக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் 5 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியை உலக வங்கியிடமிருந்து பெற்று செயல்படுத்தப்படும்.
* நகர்ப்புற ஏழை, எளியவர்களுக்கான நிலைக்கத்தக்க வீட்டுவசதி மற்றும் உறைவிடத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* நிலுவையில் உள்ள பட்டா கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க புதிய சர்வேயர்கள் உருவாக்கப்படும். 

 * அரசு ஊழியர்களுக்கு சென்னை நகரில் ரூ.76 கோடியில் புதிய *அடுக்குமாடி குடியிருப்பு

பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்க தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற சிறப்பு நோக்க முகமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* சென்னையில் 8 இடங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது
* கிருஷ்ணகிரி, திருச்சி, ஓசூர், காஞ்சிபுரம், நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.
* உயர்கல்வி ஊக்கத் தொகை திட்டத்திற்கு ரூ.1949.58 கோடி ஒதுக்கீடு
* நபார்டு வங்கியின் உதவியுடன், ரூ.106.29 கோடி செலவில் 23 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
* அனைத்து பழங்குடியினர் குடியிருப்புகளிலும், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த ஒரு சிறப்புத் திட்டம்.
* சிறப்புத் திட்டத்தின் கீழ் ரூ.660 கோடியில் விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
* சுற்றுலா மேம்பாடு திட்டத்திற்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு.
* சுற்றுலா ஊக்குவித்தல் திட்டத்திற்கு 295 சுற்றுலாத்தளங்கள் மேம்படுத்தப்படும்.
* சென்னை தியாகராய நகர் பகுதியில் 1.41 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
* சென்னை நகரின் பிற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் படிப்படியாக பொருத்தப்படும்.
* அரசுப் பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிநியமனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு.
* மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் நடவடிக்கை.
* நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களுக்கும் சிறப்பு ஆட்சேர்ப்பு பணிகள் நடத்தப்படும்.

 * ராமநாதபுரம், விழுப்புத்தில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ஒப்புதல். ரூ.3041 கோடி மதிப்பில் திட்டங்கள் உருவாக்கப்படும். 60 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட இரண்டு நிலையங்கள் அமைக்கப்படும். 

* பிரதமர் நகர்புற திட்டத்தின் கீழ் 1,12,876 தனி வீடுகள் அமைக்கப்படும். 65,290 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும். 

* உழவர் பாதுகாப்பு திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* விவசாயிகளின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக உழவர்-அலுவலர் தொடர்பு திட்டம் அறிமுகம். 
* நடப்பாண்டில் 10,276 சீருடை பணியாளர்கள் புதியதாக பணியமர்த்தப்படுவார்கள். 
* விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு தொகை உயர்வு. 
* 8 மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தப்படும் மண்டலங்கள் அமைக்கப்படும். 
* 906 குளங்கள், 183 அணைக்கட்டுகள் சீரமைத்தல், 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் அமைக்க ரூ.649 கோடி ஒதுக்கீடு. 
* வேளாண் பதப்படுத்தப்படும் மண்டலங்கள் அமைக்கப்படும். 
* தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி உள்ள 8 மாவட்டங்களில் அமைக்க உத்தேசம் செய்யப்பட்டுள்ளது. 
* கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.
* சரபங்கா நீரேறறு பாசனை திட்டத்திற்கு கூடுதலாக ரூ.350 கோடி ஒதுக்கீடு. 
* துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மானிய விலையிலேயே தொடர்ந்து வழங்கப்படும். 
* உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மற்றும் செயல் திறன் மானியம். 
* மானியத்தை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 

* 2020-21 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும். 

* 7,233 ஏக்கர் ஆக்கரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
* மின்சாரத்துறைக்கு ரூ.20,115.58 கோடி ஒதுக்கீடு. 
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ.375 கோடி ஒதுக்கீடு. 
* சேலம் புத்தரகவுண்டன்பாளையம் உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள்  அமைக்கப்படும். 
* திருநெல்வேலி கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவு பூங்கா அமைக்கப்படும். 
* 4,997 விசாப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும். 
* கீழடியில் கிடைக்கும் பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி ஒதுக்கீடு. 
* இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பிடூ ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். 
* திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுப்படுத்தப்படும். 

* தமிழகத்தின் மொத்த வருவாய் ரூ.2,19, 375 கோடி.

* தமிழகத்தின் மொத்த செலவு ரூ.2,41.601 கோடி 
* தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.22,225 கோடி. 
* 2018-19 ஆம் நிதியாண்டில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.17% வளர்ச்சி. 
* 2019-20 ஆம் நிதியாண்டில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27%
* இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட, கடந்த ஆண்டு தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 5% அதிகம்.
* வரும் நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 * முத்திரை தாள் வரி 1% இருந்து 0.25% ஆக குறைப்பு. குறைந்தபட்சமாக ரூ.5000 மிகாமல் வசூலிக்கப்படும். 

* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடி ஒதுக்கீடு. 
* இளைஞர் நலனுக்காக ரூ.218 கோடி ஒதுக்கீடு. 
* அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கா இந்த ஆண்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு. 
* காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் - முதல் கட்டமாக காவிரி முதல் வெள்ளாறு வரை இணைப்பு கால்வாய் அமைக்கப்படும். 
* இணைப்பு கால்வாய் அமைக்க நிலம் கையகப்படுத்த, பணி மேற்கொள்ள ரூ.700 கோடி ஒதுக்கீடு. 
* பக்கிங்காம் கால்வாய்,  கூவம், அடையாறு வடிகால்களை மறுசீரமைக்க ரூ.5439,79 கோடி ஒதுக்கீடு. 

* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.5,500 கோடி. 

* சென்னை சுற்றுவட்டச்சாலை திட்டங்களுக்கு ரூ.12,301 கோடி ஒதுக்கீடு. 
* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15,850 கோடி ஒதுக்கீடு. 
* போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி ஒதுக்கீடு. 
* எரிசக்தி துறைக்கு ரூ.20,115 கோடி ஒதுக்கீடு.
* பள்ளிகலில் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு. 
* உயர்கல்வித்துறைக்கு ரூ.5,052 கோடி ஒதுக்கீடு. 

 * புதிதாக 11 மருத்துவ கல்லூரிகலை நிறுவுவற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு.

 
* சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு. 
 
* கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். 
 
* தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு. 
 
* திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தொழில் முனைய மேம்பாட்டு திட்ட ம் செயல்படுத்தப்படும். 

* மதிய உணவு திட்த்துக்கு ரூ.5,935 கோடி 

* ஆதிதிராவிட் முன்னேற்றத்திற்காக ரூ.4,109 கோடு ஓதுக்கீடு. 
* ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்கு ரூ.2,018 கோடு ஒதுக்கீடு. 
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1,064 கோடு ஒதுக்கீடு. 
* ஜவுளித்துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு. 
* தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.1,53 கோடி ஒதுக்கீடு.
* இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடு ஒதுக்கீடு. 
* மகளிர் நல திட்டங்களுக்கு ரூ.78,796 கோடி ஒதுக்கீடு. 
* தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படும். 

* புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு பெருந்திட்ட வளாகம் அமைக்க ரூ.550 கோடி ஒதுக்கீடு. 

* தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு. 
* சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4,315 கோடி ஒதுக்கீடு. 

* சிறைச்சாலைகளுக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு. 

* சாலை பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.1,403 கோடி ஒதுக்கீடு. சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் சாலை பாதுகாப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும். 
* நீதி நிர்வாகத்தில் கூ.1,403 கோடு ஒதுக்கீடு. 
* சென்னையில் வெள்ளி பாதிப்பை குறைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு
* தமிழக காவல்துறைக்கு ரூ.8,876 கோடி
* தீயணைப்புத்துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.

* உள்ளாட்சிகளுக்கு ரூ.6.754 கோடு ஒதுக்கீடு.  

* கிராம உள்கட்டமைப்புகளின் அடிப்படை தேவைகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. 
* மத்திய அரசின் தொலைநோக்கு திட்டங்களுக்கு கீழ் தமிழகத்தின் 179 திட்டங்கள் சேர்ப்பு.
* வேளாண் மண்டலம் விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. 
* கரும்பு விவசாயிகளின்  நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு. 

* போக்குவரத்து மானியங்களுக்காக ரூ.110 கோடி ஒதுக்கீடு. 

* வேளாண்துறைக்கு ரூ.11.894 கோடு ஒதுக்கீடு. 
* 1364 நீர்பான பணிகளுக்காக ரூ.500 கோடு ஒதுக்கீடு. 
* நீர்பாசன திட்டங்களுக்காக ரூ.6991 கோடி ஒதுக்கீடு. 
* முதல்வரின் பசுமை வீடு திட்டம் - வீடு ஒன்றுக்கு கட்டுமான செலவு ரூ.2,10 லட்சசமாக உயர்த்தப்படும். 
* பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும். 

 நிர்பயா நிதியின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.75.02 கோடியில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.

அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் பயணச் சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்மார்ட் கார்டு இருந்தால் எந்தக் கடையிலும் பொருட்களை வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
 

 அம்மா உணவகத் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

சாலைப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் ரூ.500 கோடியாக உயர்த்தப்படும்.
நெடுஞ்சாலைத் துறை பாதுகாப்புக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்படும்.
 

  • அம்மா வாகனத் திட்டத்துக்கு  ரூ.253.14 கோடி ஒதுக்கீடு.
  •  சுத்திகரிக்கப்பட் நீர் மறுபயன்பாட்டுக் கொள்கை ஏற்படுத்தப்படும்.
  • கால்நடைத் துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.
  • திருநெல்வேலி மாவட்டம்  கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடி செலவில் உணவுப்பூங்கா அமைக்கப்படும்.
  • ஏழைகளுக்கு ஆயுள் காப்பீடு திட்டம்

  • ஏழைக் குடும்பங்களுக்கு எல்ஐசியுடன் இணைந்து விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு அளிக்கப்படும்.
  • விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கு இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.
  • இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.
  • திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்.
  •  தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • தமிழகத்தின் கடன் 4.56 லட்சம் கோடியாக உள்ளது.
  •  பொருளாதார நெருக்கடிகளை தமிழக அரசு திறமையாக சமாளித்து வருகிறது.

    கல்வித் துறைக்கு ரூ.34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
    11 மாவட்டங்களில் புதிய மருத்துவக்  கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு
    * கேவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும். 75 ஆம் ஆண்டை நிறைவு செய்வதால் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.
    * அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பெட்ரோலிய பொருட்கள் மீதான விற்பனைவரி வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் எனவும், மது வகைகள் மீதான விற்பனை வரியும் சீராக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    * 2019-20 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் ரூ.33,978.47 கோடியாக இருந்த மத்திய வரியின் மாநில அரசிற்கான வங்கு, 2019-20 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் ரூ.26,392.40 கோடியாக  முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகம் மாபெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 
    * மத்திய அரசிடம் இருந்து தமிழத்தின் பங்காகப் பெறப்படும் மத்திய வரிகளின் நிதிப் பகிர்வு 2019-20 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளதால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. 
    * 2017-18 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு ரூ.4073 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக உள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என நம்புகிறோம். 
    * ஓ.பன்னீர்செல்வம் மதியம் 1.14 மணியளவில் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். 
    * பேரவை மீண்டும் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என பேரவைத் தலைவர் தெரிவித்தார். 
    * வெள்ள உபரிநீரை மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்ட வறண்ட குளங்களுக்கு திருப்பிவிட சாரபங்கா நீரேற்று பாசன திட்டம். 
    * அரசு பள்ளிகளில் உயர்தர பரிசோதனை கூடங்கள் அமைக்க ரூ.520 கோடி ஒதுக்கீடு.

    * 525 மின்சார பேருந்துகள் வாங்வதற்காக ரூ.960 கோடி ஒதுக்கீடு. 

    * தூத்துக்குடி அருகே, ரூ.49,000 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை. 
    * தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

    தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

    தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

    உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

    Related Stories

    No stories found.
    X
    Dinamani
    www.dinamani.com