தில்லியில் புதிதாக 2,089 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,140 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு இன்று கரோனாவால் 42 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னையில் இன்று 1,205 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) புதிதாக 3,680 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலமாக கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
வீட்டு ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கர்நாடக முதல்வர் எடியூரப்பா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். விரிவான செய்திக்கு..
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமைச் செயலகம் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு மூடப்படுகிறது.
சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நாளை முதல் இரண்டு நாள்களுக்கு மூடப்படுகிறது. விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களில் இதுவரை 52 ஆயிரத்து 287 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 20 ஆயிரத்து 271 போ் மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனா். விரிவான செய்திக்கு..
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு இன்று கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் மெல்ல குறைந்து வருகிறது. 72 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 49 ஆயிரம் பேர் குணமடைந்து, 21 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,060 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தடுப்புப் பணியில் காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதனால் கரோனாவுக்கு காவல்துறையினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள ஒரு விடுதியில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கரோனாவால் பாதிக்கப்படும் அனைத்துக் காவலா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரிவான செய்திக்கு..
கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) காற்றில் மிதந்து மனிதா்களிடையே பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 20,642 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 482 போ் உயிரிழந்தனா். விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,228 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 339 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் பிறந்து 25 நாட்களே ஆன குழந்தை ஒன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) 3,015 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று புதிதாக 4,231 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிக்கு கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டதால், பரிசோதனைக்காக வரிசையில் காத்திருந்த போதே குழந்தை பிறந்த சம்பவம் லக்னௌவில் நடந்துள்ளது. விரிவான செய்திக்கு..
பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா பாதிப்பு வேகம் உயர்ந்து வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. விரிவான செய்திக்கு..
கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்றும், கரோனாவுக்கு எதிராக வலுவான போரை இந்தியா நடத்துகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உச்சபட்சமாக 1,555 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 13 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,359 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,40,848 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவர்கள் கூறினால் சந்தேகப்படுவது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,509 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,07,301 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..