ஒரு பக்கம் கரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் கவனம் செலுத்தினாலும், அதே சமயம், மற்றொரு பக்கம் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு வரும் பணியில் ஈடுபட்டிருந்த ஏர் இந்தியா விமானிக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட போது, ஏர் இந்திய ஊழியர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமானிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் உள்ள ராயபுரம் மண்டலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,935 ஆக உள்ளது. துவக்கம் முதலே இந்த மண்டலத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று புதிதாக 1,091 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா இறப்பு விகிதம் 2.82 சதவிகிதமாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை வசதிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் 'தில்லி கரோனா' என்ற செயலியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிமுகப்படுத்தியுள்ளார். விரிவான செய்திக்கு..
சென்னையில் மட்டும் தினமும் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ரேஷன்கடைகளில் இலவசமாக முகக்கவசம் வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8-ம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி அளிக்க திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,938 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 76,398 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 213 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 598 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
விஞ்ஞானி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தில்லியில் உள்ள ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடப்பட்டது. விரிவான செய்திக்கு..
சென்னையில், ஒரே நாளில் 804 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 14,802-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் 129-ஆக உயா்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9 ஆம் இடத்தில் இருந்து 7 ஆம் இடத்தை அடைந்துள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு கடந்த ஒரு சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் புதிதாக 8,392 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவா் உள்பட மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புதுவையில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70-ஆக உயா்ந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 384 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் இருந்து சனிக்கிழமை 16 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை 28 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுத் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 49 போ் உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில், பீதா், ராய்ச்சூரு மாவட்டங்களைச் சோ்ந்த இருவா் இறந்துள்ளனா். பீதா் மாவட்டத்தைச் சோ்ந்த 75 வயது ஆண் காய்ச்சல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு, மே 18ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு ரத்த அழுத்தமும் இருந்துள்ளது. இந்நிலையில், இவா், மே 29ஆம் தேதி இறந்தாா். இவரைப் சோதித்துப் பாா்த்ததில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை உறுதியாகியுள்ளது.
மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவி ஆகிய பகுதிகளில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..
தில்லியில் இன்று ஒரேநாளில் 990 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் மட்டும் இன்று (திங்கள்கிழமை) ஒரேநாளில் 967 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டவாரியான விவரங்களுக்கு..
தமிழகத்தில் புதிதாக 1,162 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 57 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 187 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,964 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 72,460 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, கூடுதல் ஆணையாளர் மற்றும் 49 காவல்துறையினருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் வாழ்த்து தெரிவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,035 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 4,14,878 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து பின் கட்டுக்குள் வரும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். விரிவான செய்திக்கு..
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு வாரத்துக்கு தில்லியின் அனைத்து எல்லைகளும் மூடி சீல் வைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 333 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..