மும்பை மற்றும் தாராவிப் பகுதியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் புதிதாக 195 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 918 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,318 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,948 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) ஆயிரத்தைத் தாண்டியது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,774 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 3,713 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சனிக்கிழமை காலை நிலவரப்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இருந்து, கரோனா நுண்கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 58.48% பேர் (28,823) குணமடைந்துள்ளனர்; இறப்பு சதவிகிதம் 1.49% ஆக உள்ளது. விரிவான செய்திக்கு..
பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 46,860 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து அந்த நாட்டில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12,74,974 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தோர் எண்ணிக்கை 99 லட்சத்தைத் தாண்டி ஒரு கோடியை நெருங்குகிறது, மற்றொரு பக்கம் பலி எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவக் கூடிய 6 மருந்துகளை பிரிட்டனின் லாசன் ஹெல்த் ரிசா்ச் இன்ஸ்டிடியூட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பட்டியலிட்டுள்ளனா்.
நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 15,685 -ஆக சனிக்கிழமை அதிகரித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 18,552 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 5,08,953 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் 1,52,765 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 79,815ஆக உயர்வு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,106 ஆக உயர்ந்துள்ளது.
ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகிறது. விரிவான செய்திக்கு..
மும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தாராவியில் தொற்றால் பாதிக்கப்பட்டவவர்களின் எண்ணிக்கை 2,218ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 1,019 பேர் சிகிச்சை உள்ளனர். அதேசமயம் இன்று உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. தாராவில் கரோனாவுக்கு இதுவரை 81 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 5,024 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,52,765 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 65,829 சிகிச்சையில் உள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 175 உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று 1,956 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷ்யாவில் கரோனா பாதிப்பு அண்மை தினங்களாக அதிகரித்து வருகிறது. இங்கு நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,800 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 813 பேர் கரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 92 பேர் பலியானதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 8,781ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இதுவரை இல்லாத அளவுக்கு 3,645 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 15 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகம் முழுவதும் மீண்டும் முழுமையாக பொதுமுடக்கம் அறிவிப்பது தொடர்பாக வரும் 29 ஆம் தேதி ஆலோசித்து அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் களத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் முழு முகக்கவசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகிறது. விரிவான செய்திக்கு..
நாடு முழுவதும் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 17,296 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4.90 லட்சமாக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 197 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 4,399 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 192 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புது தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காகத் துணைநிலை ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) 1,675 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 3,509 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,113 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,13,994 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,044 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,92,970 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 792 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,21,176 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 4.75 லட்சத்தைத் தாண்டியது. அரசுகள் வெளியிடும் அதிகாரப்பூா்வ விவரங்களைக் கண்காணிக்கும் ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதளம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, செவ்வாய்க்கிழமை இரவு வரை அந்த நோய்க்கு 4,75,076 போ் பலியாகியுள்ளனா். கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 1.22 லட்சம் போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் முலம், கரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை எழாமல் தவிா்க்க முடியும என்று லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு...
மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 3,890 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 152 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 397 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மட்டும் 1,211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,865 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் 3,788 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,176 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,06,881 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இதுவரை 51 காவலர்கள் பலியாகியிருப்பதாக, காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
இந்தியாவில் ஒரேநாளில் 2 லட்சம் மாதிரிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 587 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 1,91,449 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
மாவட்ட ஆட்சியர்களுடனான முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,892 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,88,926 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சுமார் மூன்று மாத காலத்துக்குப் பின் புது தில்லியில் உள்ள அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் ஜூன் 25-ம் தேதி முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பட உள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட 72 வயது முதியவர் மாயமாகிவிட்டதாக அவரது மகன் புகார் அளித்துள்ளார். விரிவான செய்திக்கு..
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மும்பையைச் சேர்ந்த 70 கரோனா நோயாளிகள் மாயமாகியிருப்பதாக பிரிஹன்மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் ஏற்கனவே இராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டையில் கரோனா பாதிப்பு ஐந்து ஆயிரத்தை நெருங்கிவிட்ட நிலையில், கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் கரோனா பாதிப்பு ஐந்து ஆயிரத்தை நெருங்குகிறது. விரிவான செய்திக்கு..