எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன.
கரோனா தொடர்பான உலகச் செய்திகளிலிருந்து உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் இங்கே - கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ்.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471லிருந்து 492ஆக உயர்ந்துள்ளது. இதன்படி இந்தியர்கள் 451, வெளிநாட்டினர் 41 பேர் என மொத்தம் 492 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு சாா்பில் மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு சார்பில் மேலும் 500 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். விரிவான செய்திக்கு..
கரோனா அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கையாக திருப்பூர் பனியன் நிறுவனங்கள் மார்ச் 31 வரை மூடப்படுகிறது.
திருப்பூர் அருகில் உள்ள ஈரோடு மாவட்டம் கரோனா பாதிப்புகள் காரணமாக முடக்கப்பட்டு உள்ளது. எனவே அருகில் உள்ள திருப்பூர் மாவட்டத்துக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக, திருப்பூரில் பனியன் நிறுவனங்கள், அது சார்ந்த தொழில் நிறுவனங்கள் மார்ச் 31 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள உயர் நீதிமன்றம், மார்ச் 24 முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.
அவசரமான விசாரணைகள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை பாராட்டும் விதமாக ஞாயிறு மாலை 5 மணிக்கு பொதுமக்கள் கைதட்டி தங்களது நன்றியை தெரிவிக்குமாறு மோடி வலியுறுத்தியிருந்தார். இதனை பெரும்பாலான மக்கள் பின்பற்றினர். இந்த நிலையில், சாலையில் நின்றபடி தனி ஒருவராய் கைதட்டி தனது நன்றியைத் தெரிவித்த நபரின் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது...
Wow! Speechless #JantaCurfew .
— Virender Sehwag (@virendersehwag) March 22, 2020
May our unity help us go through this difficult time with ease and may the #COVID2019 go away for good very soon. pic.twitter.com/BGw2jdwpGJ
உச்ச நீதிமன்றத்தில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நேரடி விசாரணைகள் நடைபெறாது என உச்ச நீதிமன்றம் அறிவி்த்துள்ளது.
நீதிமன்ற வளாகத்திலுள்ள வழக்கறிஞர்கள் கூடங்களும் மூடப்படும் என்றும் மிகவும் அவசரமான விஷயங்களில் காணொலிவழி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் தேவைப்படுவோருக்கு இலவசமாக உணவு, இருப்பிடம் மற்றும் மருந்துகளை வழங்குமாறு முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
இதற்காக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 20 கோடியையும் அவர் ஒதுக்கியுள்ளார்.
Mental Health In Times Of #COVID19
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) March 23, 2020
Isolation & stress can be hard for many.
Please understand that this is quite natural.
📺 Limit news intake if it makes you anxious
👨🏾⚕️Listen to your doctor
💊 Don't forget your medicines
Try 📖🎼💃✍️🎨
🚶🏾Exercise
We Shall Overcome
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விரிவான செய்திக்கு..
பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றால் 18 வயதுள்ள ஒருவர் உயிரிழந்தார். பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே மிகவும் குறைந்த வயதில் கரோனாவுக்குப் பலியானவர் இவர். பிரிட்டனில் கடந்த ஆறு நாள்களில்.. விரிவான செய்திக்கு..
கரோனா முன் எச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக்கடைகளை மூட நகை வணிகர் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பரில் இத்தாலியில் கரோனா வைரஸ் தொற்று இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று இத்தாலியின் புகழ்பெற்ற மருத்துவயியல் நிபுணர் கியுசெப்பே லெமுச்சி அண்மையில் அமெரிக்க தேசிய பொது வானொலிக்குப் பேட்டியளிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.விரிவான செய்திக்கு..
கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா்கள் இருக்கும் 75 மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான அரசு பேருந்து சேவையை 31-ஆம் தேதி வரை நிறுத்திவைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
அமராவதி: கரோனா அச்சுறுத்தலைத் தொடா்ந்து ஆந்திர மாநிலத்தில் ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருள்களும், குடும்பத்துக்கு ரூ. 1000 உதவித்தொகை அளிக்கவும் ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
புது தில்லி: கரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய சேவைகளையும் வங்கிகள் ரத்து செய்துள்ளன. விரிவான செய்திக்கு..
புது தில்லி: நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) நள்ளிரவு தொடங்கி மாா்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தொடர்பான உலகச் செய்திகளிலிருந்து உள்ளூர் செய்திகள் வரை உடனுக்குடன் இங்கே - கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ்.
சென்னை: கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவு: ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் அமைப்பினர் ஈடுபட்டனர்.
ஈரோடு தனிமைப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தை முழுமையாகப் பூட்டி சீல் வைத்தனர் அதிகாரிகள்.
அபுதாபியில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு வந்தவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கோயம்பேடு பேருந்துநிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
தெலங்கானாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து அவரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோருக்கு மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்தினை அளிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. விரிவான செய்திக்கு..
வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..