கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவலை ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரம், மும்பை, தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,756-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலியானோரின் எண்ணிக்கை 2,206-லிருந்து 2,293-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,917-லிருந்து 22,455-ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நான்காவது முறையாக பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றும், அது மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரை.. உடனுக்குடன் அறிய..
தமிழகத்தில் புதிதாக 716 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
பாட்னா: ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருவதால், இந்திய தொழில்துறை விரைவில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சிரமப்பட நேரிடும். விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோரில் ரஷியா உலகளவில் இரண்டாமிடத்தில் உள்ளது. விரிவான செய்திக்கு..
இக்கட்டான சூழ்நிலையில், கரோனாவுக்கு ஒருபோதும் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,140 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 31,674 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
#WATCH I want to ask the people of Delhi to send their suggestions on what they want post May17. You can send in your suggestions by 5pm tomorrow on the number 1031 , WhatsApp no. 8800007722 or e-mail at delhicm.suggestions@gmail.com: Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/LZsAyBHMn7
— ANI (@ANI) May 12, 2020
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு..
சென்னையில் திங்கள்கிழமை புதிதாக 538 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 4,371-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தில்லியில் உள்ள ஏர் இந்தியா தலைமை அலுவலகம் இரண்டு நாட்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையற்றுகிறார். விரிவான செய்திக்கு..
உலகையே உலுக்கி வரும் கரோனா தொற்று அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்தை எட்டிவிட்டது, பலியானோர் எண்ணிக்கை 81 ஆயிரமாக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தீநுண்மி பரவத் தொடங்கி கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்தை எட்டியுள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி இதுவரை 2,87,463 பேர் உயிரிழந்துள்ளனர். விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்திக்கு..
சென்னை மந்தைவெளி ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் புதிதாக 406 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களுக்கான விதிமுறைகளில் இந்திய ரயில்வே மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை பிற மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய இன்றைய (திங்கள்கிழமை) சமீபத்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..
லண்டனில் நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஊரடங்கு ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர இது சரியான நேரம் அல்ல. ஜூன் 1ஆம் தேதி முதல் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது என்றார். பிரிட்டனில் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோரில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 798 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதியான இந்தூரில் பிறந்து 20 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை கரோனாவில் இருந்து மீண்டுள்ளது. விரிவான செய்திக்கு..
நாளை தொடங்கப்பட உள்ள பயணிகள் ரயில் சேவையை முன்னிட்டு ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கியது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் கரோனா வார்டுகளில் உயிரிழக்கும் நபர்களின் உடல்கள் அங்கேயே பிளாஸ்டிக் பைகள் சுற்றப்பட்டு இருப்பது ஏற்கனவே விடியோ மூலம் வலைத்தளங்களில் பரவியது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். விரிவான செய்திக்கு..
சிங்கப்பூரில் மேலும் 486 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,656 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ரஷியாவில் தொடர்ந்து 9 ஆவது நாளாக, நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்த நிலையில் உள்ளது. விரிவான செய்திக்கு..
ஜெர்மனியில் மேலும் 357 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, அங்கு மொத்த பாதிப்பு 1,69,575 ஆக அதிகரித்துள்ளது.விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் விவரத்தை பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு..
தில்லியில் புதிதாக 310 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு...
இந்தியாவில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறத் தொடங்கிவிட்டதாக நுச்சுயிர் வல்லுநர் டாக்டர் டி. ஜாகோப் ஜான் கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 509 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 3,839-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, மருத்துவமனை மூடப்பட்டது. விரிவான செய்திக்கு..
கோயம்பேடு சந்தை மூலமாக சென்னையில் மேலும் 40 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..
நாடு முழுவதும் புதிதாக 3,320 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,662-ஆக சனிக்கிழமை அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 95 போ் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,981-ஆக அதிகரித்துள்ளது.
தில்லியில் புதிதாக 224 பேருக்கு கரோனா நோய்த்தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6,542-ஆக அதிகரித்தது. இதுதொடா்பாக தில்லி அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை மாலை வரையில் 224 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் புதிதாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை’ என்றனா். தில்லியில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து 2,020 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 68 போ் கரோனாவால் உயிரிழந்தனா்.
சென்னையில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாக 509 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தாராவியில் இன்று புதிதாக 26 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மொத்தம் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 859 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 669 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை கர்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,012 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 15 குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 11 ஆண் குழந்தைகள், நான்கு பெண் குழந்தைகள் அடங்குவர். விரிவான செய்திக்கு..
கோயம்பேடு சந்தை மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் ஒரேநாளில் 5 மருத்துவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..