பிற மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதித்தோர் மற்றும் மொத்தம் பாதித்தோரின் சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் மகாராஷ்டிரத்திலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியவா்கள்.
நேபாளத்தில் 9 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் சமீா் குமாா் அதிகாரி கூறியதாவது:
நான்காவது கட்ட தேசிய பொது முடக்கம் திங்கள்கிழமையில் இருந்து தொடங்கவுள்ள நிலையில் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன், அத்துறை அமைச்சா் அமித் ஷா பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டாா். பொது முடக்கத்தின் வழிமுறைகளை வகுப்பது தொடா்பாக இந்த ஆலோசனைகள் நடத்தப்பட்டன. விரிவான செய்திக்கு...
நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட 5.8 லட்சத்துக்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் தாமதமடைந்திருக்கலாம் அல்லது ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு...
சென்னையில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் மொத்தம் 332 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் மொத்தம் 332 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
உத்தர பிரதேசத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,140ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை செயலர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வைரஸால் இதுவரை 95 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு
செவித்திறன் குறையுடையோர் தகவல் பரிமாற்றத்துக்கு ஏதுவாக உதடு மறைவற்ற முகக்கவசம் தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா தொற்றுப் பரவியிருக்கும் இந்த பேரிடர் காலத்தில், வென்டிலேட்டர்கள் கொடுத்து உதவிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 120 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1,140ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 862 காவலர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 268 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,576 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 120 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1,140ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 862 காவலர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 268 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,576 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் தில்லியில் இன்று மேலும் 438 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 9,333ஆக உயர்ந்துள்ளது. அதில் 5,278 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
அண்டை மாநிலமான கர்நடாகத்தில் இன்று மேலும் 23 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,079ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் 548 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இதுவரை 35 பேர் பலியான நிலையில் 494 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
செவித்திறன் குறையுடையோர் தகவல் பரிமாற்றத்துக்கு ஏதுவாக உதடு மறைவற்ற முகக்கவசம் தமிழகத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்புர் பகுதியில் இருந்து சைக்கிள் ஒன்றை திருடிச் சென்ற புலம்பெயர் தொழிலாளி, அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிவைத்து விட்டுச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 451 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
Our 29 year old #CoronaWarrior is back. He is hale & hearty and looks forward to report back on duty.
— Mumbai Police (@MumbaiPolice) May 13, 2020
Welcome back, hero!#AamhiDutyVarAahot#MumbaiPoliceOnDuty#MumbaiFirst#TakingOnCorona pic.twitter.com/EpIKP58q7P
சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 5,637 ஆக உயர்ந்துள்ளது. ராயபுரத்தில் மட்டும் 971 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,576 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மும்பையில் 933 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,467ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 1,576 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மும்பையில் 933 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,467ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 434 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,108-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் இதுவரை 71 போ் பலியாகியுள்ளனா்.
இன்று 359 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 2,599 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சென்னையில் மட்டும் இன்று 310 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 5947 ஆக அதிகரித்துள்ளது.
பொதுமுடக்கத்தை விலக்கினால் உயிரிழப்புகளும் பொருளாதார இழப்பும் அதிகரிக்கும் என்று வெள்ளை மாளிகை கரோனா ஒழிப்புக் குழு உறுப்பினா் அந்தோணி ஃபாசி விடுத்துள்ள எச்சரிக்கை ஏற்புடையது அல்ல. குறிப்பாக பள்ளிகள் திறப்புக்கு அந்த எச்சரிக்கை பொருந்தாது.
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் பயன்படுத்தும் கவசப் பொருள்களில், அந்த தீநுண்மி ஒட்டிக் கொள்வதைத் தடுக்கும் மேற்பூச்சு ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா். விரிவான செய்திக்கு...
வங்கதேசத்திலுள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாமில் முதல் முறையாக இருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: காஸ்க் பஜாா் பகுதியிலுள்ள ரோஹிங்கயா அகதிகள் முகாமில் இருவருக்கு கரோனா நோய்த்தொற்ரு இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அந்த இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 2,102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,635 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 363 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து கரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை மாநிலம் முழுவதும், 9,674-ஆகவும், சென்னையில் 5,637-ஆகவும் அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...
நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 78 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,549-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 26,235 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 49,219 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். விரிவான செய்திக்கு...
கேரளத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 45 லட்சத்தை எட்டியது. பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 425 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,895ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 5,254 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 3,518 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 123 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் தில்லியில் கரோனாவுக்கு இன்று எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 425 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,895ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 5,254 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 3,518 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 123 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் தில்லியில் கரோனாவுக்கு இன்று எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 425 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,895ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 5,254 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 3,518 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 123 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் தில்லியில் கரோனாவுக்கு இன்று எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 414 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 6,053ஆக உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக தலைநகர் காபூல் 1,718 பேரும், ஹெராத் 1,067 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு கரோனாவுக்கு 153 இதுவரை பலியாகியுள்ளனர்.
சிங்கப்பூரில் மேலும் 793 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,598 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
அசாமில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நீடிக்க மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் சார்பானந்தா சோனோவால் கடிதம் எழுதியுள்ளார். விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. விரிவான செய்திக்கு..