தாராவியில் புதிதாக 47 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
பிற மாநிலங்களில் இன்று (வியாழக்கிழமை) கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,345 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 8,228-ஆக அதிகரித்துள்ளது. நாள் தோறும் சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டிவிட்டது. அதிக பாதிப்பு இருக்கும் நகரங்களில் முதல் இடத்தில் மும்பை உள்ளது. சென்னையில் பாதிப்பு அதிகம் இருந்தாலும் பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. விரிவான செய்திக்கு..
தென்கொரியாவில் பள்ளி மாணவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து திறக்கப்படுவதற்கு முன்பே பள்ளி மூடப்பட்டது. விரிவான செய்திக்கு..
சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 8,228-ஆக அதிகரித்துள்ளது. நாள் தோறும் சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 134 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
சிங்கப்பூரில் மேலும் 448 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
விமானப் பயணத்தின் போது பயணிகளும், விமான சேவை வழங்கும் நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 115 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது. இதையடுத்து ராயபுரத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,538 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 5,611 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை புதன்கிழமை 1,06,750 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான விவரங்களுக்கு...
#WATCH Tamil Nadu: Migrant workers gather in large numbers at Sundarapuram, Coimbatore to collect train passes for today's 'shramik special' trains for Uttar Pradesh & Bihar. pic.twitter.com/49tG73eNUz
— ANI (@ANI) May 20, 2020
தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 12,448-ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைடுத்து, அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 402-ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக 2 போ் உயிரிழந்துள்ளனா்; 37 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.
தமிழகத்தில் புதிதாக 743 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் விகிதம் 39.62% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
உலகளவில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டிவிட்டது. புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50,03,500 ஆக உள்ளது. விரிவான செய்திக்கு..
துவக்கம் முதலே கரோனா நோயாளிகளை அதிகமாகக் கொண்ட ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் அதிக எண்ணிக்கையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் அதே நேரத்தில், ஆரம்பத்தில் கரோனா பாதிப்பே இல்லாத மண்டலங்களிலும் சத்தமில்லாமல் எண்ணிக்கை உயர்ந்து தான் வருகிறது. விரிவான செய்திக்கு..
துபை: கேரளம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 88 செவிலியர்கள் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்று அங்கு கரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டில் பணியாற்றி வருகிறார்கள். விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,764 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்துள்ளது. விரிவான செய்திக்கு..
காசநோய்க்கு பயன்படுத்தப்படும் கருவிகளை கரோனா பரிசோதனைக்கும் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
குஜராத் மாநிலத்தில் கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 67 வயது நோயாளி, பேருந்து நிலையம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். விரிவான செய்திக்கு..
காற்றில் வைரஸ் பரவலைத் தடுக்க ஆறு அடி தூர இடைவெளி போதாது என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாகவும், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்தாகவும் அஸ்வகந்தா மூலிகை இருக்கும் என்று ஆராய்ச்சியின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
அந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48.94 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு இதுவரை 3,20,180 பலியாகியுள்ள நிலையில் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,07,992 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,01,139-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,263 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்ப இதுவரை 1,565 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அவற்றில் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனா் என்று இந்திய ரயில்வே செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
புது தில்லி: உலக நாடுகள் பலவற்றையும் பெரிய அளவில் பாதித்திருக்கும் கரோனா தீநுண்மி இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவே கூறலாம். விரிவான செய்திக்கு..
ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
தில்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 500 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 55 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனா தொற்றுக்கு அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,239 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
புது தில்லி: மகாராஷ்டிரம், குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்த நிலையில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது. விரிவான செய்திக்கு..
புது தில்லி: தில்லியில் தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்து விட்ட நிலையில், கரோனா நோயாளிகள் மற்றும் கரோனா பாதித்து மரணம் அடைந்தவர்களைக் கையாள்வது தொடர்பாக சில புதிய கொள்கை முடிவைகளை தில்லி அரசு வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..