இந்தியாவில் கரோனாவால் நேற்று வரை 138,845 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த பாதிப்பு 1,45,380ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பாதிப்பில் இருந்து 60,490 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தற்போது இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 80,722ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 146 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டித்தில் 52,667 பேருக்கு கரோனா பாதிப்பு கணிடறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 1,695 பேர் பலியாகியுள்ள நிலையில், 15,786 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனாவால் நேற்று வரை 138,845 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த பாதிப்பு 1,45,380ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பாதிப்பில் இருந்து 60,490 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தற்போது இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 80,722ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 146 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டித்தில் 52,667 பேருக்கு கரோனா பாதிப்பு கணிடறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 1,695 பேர் பலியாகியுள்ள நிலையில், 15,786 பேர் குணமடைந்துள்ளனர்.
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 289 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
உலக அளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்துள்ளது. விரிவான செய்திக்கு..
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே இந்தியாவில் இதுவரை இல்லாத ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு ஆகும். இதன்மூலம் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,845 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்த வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 154 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 3,867லிருந்து 4,021ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே இந்தியாவில் இதுவரை இல்லாத ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு ஆகும். இதன்மூலம் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,845 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்த வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 154 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 3,867லிருந்து 4,021ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே இந்தியாவில் இதுவரை இல்லாத ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு ஆகும். இதன்மூலம் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,845 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்த வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 154 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 3,867லிருந்து 4,021ஆக உயர்ந்துள்ளது.
மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பிற மாநிலங்களில் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..
சென்னையில் புதிதாக 549 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 11,131 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,946 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 3,53,427 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் புதிதாக 805 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர், சோலன் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு ஒப்புதல் தெரிவித்து கடிதம் வழங்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு 2,158 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் திங்கள்கிழமை நிலவரப்படி 1 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. விரிவான செய்திக்கு..
சிங்கப்பூரில் புதிதாக 344 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா பாதித்த நோயாளிகளிடம் இருந்து 11 நாள்களுக்குப் பின் தொற்று மற்றவர்களுக்குப் பரவுவதில்லை என்று சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். விரிவான செய்திக்கு..
பல முக்கியச் செய்திகளையும் தாண்டி வார இறுதி நாட்களில், சுட்டுரையில் பகிரப்பட்ட ஒரு சிறுவனின் புகைப்படம், அவன் தனது பெற்றோருடன் இணைய உதவி செய்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில், நேற்று ஒரே நாளில் 587 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 10,576-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ஊரடங்கு தளர்வினால் தில்லியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
ராஜஸ்தானில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சீனாவில் முதல் முறையாக மனிதா்களின் உடலில் செலுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு மருந்து சோதனையில் முன்னேம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ‘தி லான்செட்’ அறிவியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவில் உருவாக்கப்பட்டு, முதல் முறையாக மனிதா்களின் உடலில் செலுத்திப் பாா்க்கப்பட்ட கரோனோ நோய்த் தடுப்பு மருந்து, பாதுகாப்பானது என முதல் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. மனிதா்களின் உடல் அந்த மருந்தை ஏற்றுக் கொள்வதும் சோதனையில் உறுதி செய்யப்பட்டது.அந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 108 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவா்களது உடலில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான அணுக்களை அந்த மருந்து உருவாக்கியது என்று அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராவியில் புதிதாக 27 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று புதிதாக 765 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 587 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். விரிவான செய்திக்கு..
நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தனது ஊதியத்தில் இருந்து அடுத்த ஓராண்டுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 வீதம் பிரதமர் நல நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் மேலும் 87 காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..