திருச்சியில் போட்டியின்றித் தேர்வான 12 ஊராட்சித் தலைவர்கள்

திருச்சி மாவட்டத்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஊராட்சி மன்றத் தலைவர்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சு. சிவராசு வெளியிட்டுள்ளார்.
election
election

திருச்சி மாவட்டத்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஊராட்சி மன்றத் தலைவர்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சு. சிவராசு வெளியிட்டுள்ளார்.

லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கொப்பாவளி ஊராட்சி மன்றத் தலைவர் - ப. செல்வராணி, மாங்குடி ஊராட்சி மன்றத் தலைவர்- பெ. ராமலிங்கம், கோமாகுடி ஊராட்சி மன்றத் தலைவர்- பா. ரவி ஆகிய 3  பேர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாகலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக கி. நாராயணசாமி தேர்வாகியுள்ளார்.

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் மணியங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர்- சி. அம்மாக்கண்ணு, கொடும்பப்பட்டி ஊராட்சித் தலைவர்- பி.எஸ். வேட்டை, உசிலம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர்- பா. பொம்மநாயக்கர், அதிகாரம் ஊராட்சி மன்றத் தலைவர்- பா. துரைசாமி ஆகிய 4 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பேரூர் ஊராட்சி மன்றத் தலைவராக என். கிருஷ்ணம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் பி.என். சத்திரம் ஊராட்சி மன்றத் தலைவராக எஸ். பால்ராஜ்,சேதுராப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக டி. வசந்தா ஆகிய இருவர் தேர்வாகியுள்ளனர். புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நம்புகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக ம. செல்வராஜ் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com