திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது திருநெடுங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்டது தேவராயநேரி நரிக்குறவர் காலனி. இங்குள்ள 2 வாக்குச் சாவடிகளில் 900-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோருக்கு சினிமா நடிகர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதில் திரைத்துரையல் கோலோச்சிய நடிகர்கள் எம்ஜிஆர், நம்பியார் பெயர் கொண்ட இருவர் இணைந்து வந்து வாக்களித்தனர். இவர்கள் இருவரும் மாமன், மைத்துனர் என்பது கூடுதல் சிறப்பு.