திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஏழு வேட்பாளர்களில் ஒருவருக்கான சின்னம் இடம் பெறாமலே வாக்குப்பதிவு தொடங்கியது.
17 வாக்குகள் பதிவான நிலையில் வேட்பாளர் நிஜாம் என்பதற்கான சின்னம் இல்லை என்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாக்குபதிவு நிறுத்தப்பட்டு சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சின்னவன் கொண்டுவரப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.