தேர்தல் பார்வையாளரின் வாகனத்தை வழிமறித்த மக்கள்

ஆத்திரமடைந்த மக்கள், அங்கு வந்த தேர்தல் பார்வையாளரின் வாகனத்தை வழிமறித்து காவல்துறையினர் மீது புகார் தெரிவித்தனர்.
தேர்தல் பார்வையாளரின் வாகனத்தை வழிமறித்த மக்கள்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது வேங்கூர் ஊராட்சி. இங்குள்ள வாக்குச் சாவடியில் பணியிலிருந்த காவல்துறையினர், அப்பகுதி வீடுகளுக்குள் இருந்தவர்களை தேவையற்ற காரணங்களை கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அங்கு வந்த தேர்தல் பார்வையாளரின் வாகனத்தை வழிமறித்து காவல்துறையினர் மீது புகார் தெரிவித்தனர்.

வாகனத்திலிருந்து இறங்கிய பார்வையாளர் கணேஷ்,  விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகு பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com