மணப்பாறையில் தீவிரமாக கண்காணிக்கப்படும் பதற்றமான 28 வாக்குச்சாவடிகள்

மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய மூன்று ஒன்றியங்களில் 494 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 
மணப்பாறையில் தீவிரமாக கண்காணிக்கப்படும் பதற்றமான 28 வாக்குச்சாவடிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய மூன்று ஒன்றியங்களில் 6 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 52 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 88 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 729 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில், 2566 வேட்பாளர்களையும், 2,61,305 வாக்காளர்களையும் கொண்ட தேர்தல் வாக்களிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய மூன்று ஒன்றியங்களில் 494 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

இதில் 28 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

காலை 9 மணி வரை, மணப்பாறையில் 11%, மருங்காபுரியில் 10% மற்றும் வையம்பட்டியில் 18% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com