மதுரை ஒத்தக்கடை வாக்குச்சாவடி அருகே பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மதுரையில் தொள்ளாயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 2,500 போலீஸார், 2 ஏடிஎஸ்பி மற்றும் 12 டிஎஸ்பிக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுசிறு பிரச்னைகள் தவிர்த்து மதுரை மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
திரு மோகூர் பாஜக வேட்பாளரை திமுக ஒன்றியச் செயலர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் புகார் அளித்தால் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.