தமிழகத்தில் 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை முதல் விறுப்விறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலோடு, தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு மாலை 6 மணி நிலவரப்படி 71.62 சதவீத ஆக உள்ளது.
இந்த தேர்தலில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என ஏராளமானோர் தங்களது தொகுதியில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இதனிடையே, தமிழகத்தில் தேர்தலை நடத்தும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவும் தனது வாக்கை செலுத்தினார். அவர், சென்னை நெற்குன்றம் எம்.ஆர். மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.