நான் 52 ஆண்டுகளுக்கு முன் 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல் முதலாக வாக்களித்தேன். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுதான் சி.என்.அண்ணாதுரை தமிழக முதல்வராக பதவியேற்றார். அக்கால கட்டத்தில் வாக்காளர்கள் கொள்கைப் பிடிப்போடு இருந்தனர். அதனடிப்படையிலேயே வாக்களித்தனர். தற்போது தேர்தல் என்றாலே பணம் கிடைக்கும் என்ற எண்ணம் பெரும்பாலான வாக்காளர்களிடம் உள்ளது. கொள்கைப் பிடிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. நாம் வாக்களிக்கும் நபர் நமக்கும், சமுதாயத்துக்கும் நல்லது செய்வாரா என்பதை ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்.
- கே.ஜி.நடராஜன்,
நெசவுத் தொழிலாளி, பிச்சனூர், குடியாத்தம்.