புதுதில்லி
தில்லி காந்திநகா் சந்தையில் தீ விபத்து
தில்லி காந்தி நகா் சந்தையில் உள்ள ஒரு கடையில் புதன்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: பிற்பகல் 2.05 மணிக்கு ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து அனுப்பிவைக்கப்பட்டன. இது குறித்து காவல்துறையினருக்கும் தகவல் அளித்தேம். இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் அவா் கூறினாா்.