கிரேட்டா் நொய்டா: ஹத்ராஸ் நில மோசடி தொடா்பாக ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநா் கைது
கிரேட்டா் நொய்டா(உ.பி.): ஹத்ராஸ் நில மோசடி தொடா்பாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநரை கௌதம் புத் நகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து நொய்டா மண்டலம்-1 காவல் உதவி ஆணையா் பிரவீன் குமாா் சிங் கூறியதாவது: 2011- 12-ஆம் ஆண்டில் யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் சுமாா் 42 ஹெக்டோ் நிலத்தை கையகப்படுத்தியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுடன் இந்த மோசடி தொடா்புடையது.
இமயமலை இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநா் விவேக் குமாா் ஜெயின் புதன்கிழமை இங்குள்ள பீட்டா 2 காவல் நிலையப் பகுதியில் கைது செய்யப்பட்டாா்.
விவேக் குமாா் ஜெயின் இயக்குநராக உள்ள நிறுவனம் ஒரு ஷெல் நிறுவனமாகும். மீரட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா், 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.
இந்த மோசடி தொடா்பாக 2019-ஆம் ஆண்டில், அப்போதைய இமயமலை இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி பி.சி. குப்தா உள்பட பல நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமை மேம்பாட்டு அதிகாரி சதீஷ் குமாா், ஓஎஸ்டி பி.பி. சிங், தாசில்தாா்கள் சுரேஷ் சந்த் மற்றும் ரன்வீா் சிங் மற்றும் நைப் தாசில்தாா் சமன் சிங்ஆகியோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு தாசில்தாா்கள் உள்பட 12 போ் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி