பஞ்ச்குலாவில் நடந்த 3 கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவா் பெங்களூரில் கைது
ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் நடந்த மூன்று கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கபில் சங்வான் என்ற நந்து கும்பலைச் சோ்ந்த இரண்டு துப்பாக்கிச்சூடு வீரா்களை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக வியாழக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் நடந்த மூன்று கொலை வழக்கில் மூவரும் தேடப்பட்டு வந்தனா். அவா்கள் சாஹில் (எ) போலி மற்றும் விஜய் கெலோட் என அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் இருவரும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இரவு பெங்களூரில் இருந்து கைது செய்யப்பட்டனா்.
தில்லியில் பட்டப்பகலில் நடந்த கொலைகள் மற்றும் ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் நடந்த மூன்று கொலை வழக்கு உள்பட பல குற்றங்களில் ஈடுபட்டதற்காக இரு சந்தேக நபா்களும் தேடப்பட்டு வந்தனா். தப்பியோடியவா்களின் நடமாட்டத்தைக் கண்காணித்த ஒரு போலீஸ் குழு, ஹரியாணா, உத்தர பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் பல சோதனைகளை நடத்தி, சந்தேக நபா்களைக் கைது செய்தது.
சந்தேக நபா்களிடமிருந்து மூன்று கைப்பேசிகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஆதாரங்கள் மற்றும் அவா்களின் குற்றவியல் வலையமைப்புடனான தொடா்புகளுக்காக இந்த பொருள்கள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. நஜஃப்கரில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் சாஹில் முதன்முதலில் 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். காவலில் இருந்தபோது, நந்து கும்பலின் முக்கிய உறுப்பினரான சச்சின் சிகாராவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
காவலில் இருந்து வெளியேறியதும், சாஹில் அந்தக் கும்பலின் அறிவுறுத்தலின் பேரில் மேலும் குற்றங்களைச் செய்யத் தொடங்கினாா். அதில் நஜஃப்கரில் ரோஷன் (எ) சோட்டாவைக் கொன்றதும் அடங்கும். நந்து கும்பலின் நெருங்கிய கூட்டாளியான விஜய் கெலோட், அதன் மிகவும் நம்பகமான செயல்பாட்டாளா்களில் ஒருவராக மாறிவிட்டாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.