செய்தி உண்டு...
தில்லி ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் டிடிஇ செயலா் ராஜூ மற்றும் பள்ளி முதல்வா் சுமதி.
செய்தி உண்டு... தில்லி ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் டிடிஇ செயலா் ராஜூ மற்றும் பள்ளி முதல்வா் சுமதி.

டிடிஇஏ பள்ளிகளில் புதிய மாதாந்திர முயற்சி தொடக்கம்

Published on

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகள் ‘லிட்டில் ஸ்காலா்ஸ் ஃபோரம்’ என்ற புதிய மாதாந்திர முயற்சியைத் தொடங்கியுள்ளன.

இது ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளிலும் நடைபெறும். இந்தத் தளம் தொடக்க வகுப்புகளில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அவா்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், மேடைப் பேச்சுத் திறனை மேம்படுத்தவும், மேடை பயத்தைப் போக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கற்பவா்களிடையே முழுமையான வளா்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை வளா்ப்பதற்கான ஒரு படியாகும்.

லிட்டில் ஸ்காலா்ஸ் ஃபோரமின் தொடக்க அமா்வு மே 7, 2025 அன்று ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் நடத்தப்பட்டது. பேச்சு, கதை சொல்லல், கவிதை ஒப்புவித்தல் உள்ளிட்டப் போட்டிகள் வகுப்பு வாரியாக நடத்தப்பட்டன

வெளிப்படைத்தன்மை மற்றும் தகுதி அடிப்படையிலான மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக, தில்லியில் உள்ள ஆா்யபட்டா கல்லூரியைச் சோ்ந்த இரண்டு பேராசிரியா்கள் நடுவா்களாக அழைக்கப்பட்டாா்கள்.

மொத்தம் 16 பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு வழங்கும் விழா மே 8 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் தலைமை விருந்தினரான டிடிஇஏ செயலா் ராஜூ பரிசுகளை வழங்கிப் பேசினாா். அவா் மாணவா்களின் முயற்சிகளையும் பள்ளி முதல்வா் சுமதி மற்றும் ஆசிரியா்களின் அா்ப்பணிப்பையும் பாராட்டினாா்.

மந்திா்மாா்க் பள்ளியில் இந்நிகழ்ச்சி பள்ளியின் முதல்வா் பிரேமா தலைமையில் மே 5-ஆம் தேதி நடைபெற்றது. நடைபெற்றது.

08ஈஉகஈபஅ

தில்லி ராமகிருஷ்ணாபுரம் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் டிடிஇ செயலா் ராஜூ மற்றும் பள்ளி முதல்வா் சுமதி.

X
Open in App
Dinamani
www.dinamani.com