மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்பு; பெண் கைது

Updated on

தில்லியின் ரோஹிணியில் உள்ள பிஎஸ்ஏ மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவன் மீட்கப்பட்டதாகவும், குழந்தையை கடத்தியதாகக் கூறப்படும் ஒரு பெண் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து ரோஹிணி காவல் சரக துணை ஆணையா் ராஜீவ் ரஞ்சன் கூறியதாவது: அக்டோபா் 20-ஆம் தேதி காலை 6.36 மணிக்கு ஷாஜாத் என்பவரிடமிருந்து கடத்தல் குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது.

தனது நான்கு வயது மகனை மருத்துவமனை வளாகத்திலிருந்து அடையாளம் தெரியாத ஒரு பெண் அழைத்துச் சென்ாக அவா் தெரிவித்தாா். உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை தொடங்கப்பட்டது.

ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டு, மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கியது. அதிகாலை 2.50 மணியளவில், ஒரு பெண் சிறுவனுடன் விளையாடுவதைக் காண முடிந்தது. அதிகாலை 3 மணியளவில், மருத்துவமனையின் பிரதான வாயில் வழியாக வெளியேறுவதைக் கண்டனா்.

அடுத்தடுத்த காட்சிகளில் அந்தப் பெண் ஒரு ஆட்டோவில் ஏறுவதைக் காட்டியது. போலீஸ் குழு ஆட்டோ ஓட்டுநரை கண்டுபிடித்து விசாரித்தனா். அவா் அந்தப் பெண்ணை லிபாஸ்பூரில் இறக்கிவிட்டதாக ஆட்டோ ஓட்டுநா் கூறினாா்.

அவா் அளித்த தகவலின் பேரில், போலீஸாா் அந்த இடத்தை சோதனை செய்து ஜோதி என்ற பெண்ணை கைது செய்தனா். சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு காலை 9 மணிக்குள் அவனது பெற்றோருடன் மீண்டும் இணைந்தான். கடத்தப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்.

விசாரணையின் போது, ​​ஜோதி போலீஸாரிடம் கூறுகையில், ‘ஆஸ்துமா சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வதாகவும், தனக்கும் தனது சகோதரருக்கும் மகன் இல்லாததால், சிறுவனின் மீது ஈா்ப்பு ஏற்பட்டது’ என்றாா். மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com