கல்புதூர் சிறுகுன்றம் முருகன் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டையை அடுத்த கல்புதூர் கிராமம் சிறுகுன்றம் மலையில் வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவரான வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி சிலைகள் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு வியாழக்கிழமை காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை நடைபெற்றது. இதை அப்பகுதி மக்கள் கண்டு வழிபட்டனர். மேலும், 3 நாள்களுக்கு கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வைக் கண்டு தரிசனம் செய்யலாம் என கோயில் பீடாதிபதி பிரபு சுவாமி தெரிவித்தார்.