மருத்துவ ஜோதிடம்: கர்ப்பப்பை பிரச்னைக்கான ஒரு ஜோதிட ஆய்வு!

ஒவ்வொரு பெண்களும் குழந்தை பேருக்குப் பின்பு மேற்கொள்ளும் பிரச்னைகள் சொல்ல முடியாவண்ணம்..
மருத்துவ ஜோதிடம்: கர்ப்பப்பை பிரச்னைக்கான ஒரு ஜோதிட ஆய்வு!


ஒவ்வொரு பெண்களும் குழந்தை பேருக்குப் பின்பு மேற்கொள்ளும் பிரச்னைகள் சொல்ல முடியாவண்ணம் இருக்கும். முற்காலத்தில் நிறைய குழந்தைகள் பெற்ற பிறகு  பெண்கள் வீட்டு வேலை மட்டும் செய்து சரியான நேரத்தில் உணவும் எடுத்து தங்கள் உடலைப் பார்த்துக்கொள்வார்கள். அதனால் அவ்வளவு நோய்களோ முக்கியமாகக் கருப்பை பிரச்னைகளால் அறுவை சிகிச்சை என்று எதுவும் செய்யவில்லை. ஆனால் இக்காலகட்டத்தில் பெண்களுக்கு ஏகப்பட்ட கருப்பை பிரச்னைகள் பலவித காரணிகள் வந்துகொண்டே இருக்கிறது. 

இதற்கெல்லாம் மூல காரணம் சிறுவயதிலே மனஅழுத்தம், அளவுக்கு மீறிய பளுதூக்கல், தேவையற்ற மாத்திரைகள் உட்கொள்ளுதல், சரிவர உணவுப் பழக்கம் முறைகளை கடைப்பிடிக்காமல் இருப்பது  என்ற பலவித காரணத்தால் ஹார்மோன்களால் ஏற்படும் கருப்பை பிரச்னை, கருப்பை நீர்க்கட்டி, ஹீமோகுளோபின் குறைபாட்டால் கருப்பை இயக்கம் குறைவு, கர்ப்பப்பையில் புற்றுநோய், கருப்பை இறக்கம், மற்றும் தொற்று கிருமிகளால் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் இதுவே நிறையப் பேருக்கு ஒரு  எரிச்சலை ஏற்படுத்தும் அதனால் மனதில் அழுத்தம் அதிகப்படும் என்பது இயல்புதான்.

ஜோதிட ரீதியாகப் பார்த்தால் எந்தெந்த பாவங்கள், கிரகங்கள் தொடர்பு கொண்டால் இந்த கருப்பை பிரச்னை ஏற்படும் என்று பார்ப்போம். பெண்கள் குழந்தை பேருக்கு பிறகு இந்த பிரச்னை அதிகம் எதிர்கொள்கிறார்கள். கருப்பை என்று சொல்லுமிடம், நோய்க்குரிய இடம் மற்றும் அடிவயிறு சம்பத்தோடு 5, 6, 7 பாவங்கள் நிலை அறிய வேண்டும்.  திரேக்காணத்தில் (D3) ஒருவரின் தைரியம், வீரியம் மற்றும் உடலின் ஏற்படும் நோய் மற்றும் அறுவைசிகிச்சை என்று அறியலாம். D3 வர்க்க சக்கரத்தின் உள்ள கட்டத்தில் இருக்கும் கிரகங்கள் சேர்க்கை மற்றும் பார்வை எதிர்நோக்கும் பிரச்னைகள் என்று பார்க்கவேண்டும். நோயை தாக்கும்போது அவற்றில் லக்கினாதிபதி நிலை அவற்றோடு ரோகாதிபதி, வயிற்று பாவம் அனைத்திலும் பாவிகளோடு சம்பந்தமோ ஏற்படும்பொழுது நோயின் தாக்கம் ஏற்படும். எப்பொழுது என்றால் தசா புத்திகளில் அல்லது கோட்சர நிலையோ சம்பந்தப்படும்பொழுது ஜெனன ஜாதகத்தில் இவற்றின் மாற்றம் நடைபெறும். 

ஒரு சிறு எடுத்துக்காட்டாகக் கீழே குறிப்பிட்ட ஜாதகம் கும்ப லக்கினம் கொண்ட இந்த பெண்ணின் ஜாதகம் விளக்குகிறது. கீழே குறிப்பிட்ட D3 வர்க்க கட்டத்தில் சுக்கிரன் ஆனவர் தன் ஏழாம் பார்வையால் குரு, சனி, புதன் கிரகங்களைப் பார்வையிடுகிறார். இந்த ஜாதகரின் சனி தசா - குருபுத்தி - புதன் அந்திரத்தில் இந்த கருப்பை பிரச்சனை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை நடைபெற்றது. இவராக இன்னும் விரிவாக இந்த திரேக்காணத்தில் ஆராயலாம். இவற்றில் ராகுவும் கேதுவும் சேர்ந்தால் அவ்வளவுதான் நோயின் தாக்கம் வேறுபாதையில் தொடரும்.
 
மனித உடலில் உள்ள வயிற்றில் உள்ள குடல், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் குறைபாடு, கருப்பை, சிறுநீரகம், உடலில் உள்ள சுரப்பிகள் என்று சுக்கிரனின் ஆதிக்கம் மற்றும் தன் வேலைகளை காட்டிவிடுவார். எந்த உடலின் பாகமும் செயல்பட இயக்க ரத்தம் தேவைப்படும். இதற்கு செவ்வாய் முக்கிய காரணகர்த்தா அதோடு மற்ற கிரகங்கள் தொடர்புபடும். மேஷத்தில், விருச்சிகத்தில் உள்ள செவ்வாய், உச்சம் அல்லது நீச்சம் பெற்ற செவ்வாய் ரத்த அழுத்தத்தில் மாறுபாட்டை நிகழ்த்துவார். அவற்றால் ரத்தசோகை ஏற்பதும், ரத்தம் சிறிது குறைந்தாலே போதும் கருப்பை மற்ற இயக்கங்கள் பாதிப்பு ஏற்படுத்தும். செவ்வாய் சனி தொடர்பு கொண்டால் ரத்த குறைபாடு அதாவது ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படும். இவற்றால் எந்த பக்கத்தில் உள்ள உறுப்புகள் பாதிப்பு அடையும் என்பது அவரவர் ஜாதகத்தில் உள்ள பாவம் எடுத்துக்காட்டும். எடுத்துக்காட்டாகப் பெண்களுக்கு கருப்பையில் வீக்கம் மற்றும் இறக்கம் அனைத்துக்கும் 70% அந்த பெண்களே மூல காரணம். பெண் ஜாதகத்தில் செவ்வாய், சந்திரன் சேர்க்கை அல்லது தொடர்பு ஏற்படும் காலம் கரு கலைத்தல் நிகழும். இதுவே பலமுறை கருக்கலைப்பு நடைபெற்றால் கருப்பை பாதிப்பு ஏற்படும்.

ஐந்தாம் இடத்தில் பாவ கிரகளோடு கோட்சர ராகு தொடர்பு கொள்ளும்பொழுது இந்த கருப்பை பிரச்னை ஏற்படும். அதுவும் விரயத்தில் அதாவது 12இல் சனி தொடர்பு பெற்றால் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். சுக்கிரன் மற்றும் சனியோடு தொடர்புகொண்டால் கருப்பையில் அழுக்குற செய்து அதாவது  தொற்று நோய்க் கிருமியால் (infection) பிரச்சனை ஏற்படுத்தும். 

ஜாதகத்தில் ராசிக்கட்டத்தை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரச் சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. அவ்வாறே பெண்கள் உடலில் ஏற்படும் மாதவிலக்கு சுழற்சியும் நடைபெறும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை (சந்திரன், செவ்வாய் தொடர்பு). சந்திரன் என்பவர் நிலையற்ற ஒரு ஏற்ற இறக்கமான கிரகம் என்று சொல்லலாம். ஜாதகத்தில் இளமையில் வரும் நோய்களை, கடுமையான நோய்களைக் கண்டறிய சந்திரனின் நிலையையும், முதுமையில் வரும் நாள்பட்ட வியாதிகளைக் கண்டறிய சூரியனின் நிலையைப் பார்க்க வேண்டும். மனித உடலில் நோயை அதிகப்படுத்துவது, குறைப்பது, நோயைப் போக்குவது என எல்லாப் பணிக்கும் சந்திரனிடம் தொலையியக்கி (remote control) உள்ளது. முக்கியமாக சந்திரன் சனி தொடர்பு பெரும்பொழுது மாதவிலக்கு பிரச்னை ஏற்படும். 

அதுவே குருவோடு சேரும்பொழுது கட்டி ஏற்படுத்தும், குருவின் தாக்கமே அதிகப்படும்பொழுது பெரிய கொழுப்புக் கட்டிகளை ஏற்படுத்தும். குருவானவர் அந்த லக்கின காரர்களுக்கு யோகமில்லாதவர் என்றால் 6, 7 பகுதியில் தொடர்பு இருக்கும்பொழுது குருவின் தசாபுத்திகளில் தன் வேலையைக் காட்டிவிடுவார். முக்கியமாக ராகு கேதுக்கள் சாதகமாக மற்ற நிலையில் பாதக கிரகங்களோடு இணையும்பொழுது இதன் விளைவுகளை உச்ச அளவுக்குக் கொண்டுபோகும் அதாவது புற்று நோய்களை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு.

காலபுருஷ தத்துவப்படி எட்டாம் வீடான செவ்வாய் வீட்டில் நீச்ச சந்திரன் இருந்தால் கருப்பை பிரச்னை ஏற்படும். முக்கியமாக விருச்சிக ராசியில் சந்திரன் புதன், சனி  சாரம் பெரும்பொழுது  ஹார்மோன்ஸ் ஏற்றத்தாழ்வு, சுரப்பிகளின் பிரச்னை என்று பெண்களின் சிறு வயதிலிருந்து தாக்கும் தன்மை கொண்டது. நான் பார்த்த 80% ஜாதகத்தில் இவ்வாறு அமைப்பு பெற்றுள்ளது

பெண்களின் ஜாதகத்தில் பாதகாதிபதி, அஷ்டமாதிபதி, மற்றும் நோயை ஏற்படுத்தும் கிரகங்களின் தசா காலங்களில் நடைபெறும்பொழுது உடம்பை சரியான மருத்துவத்துறையைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கருப்பை பலப்படுத்த அத்தி, கருப்பு உளுந்து கொண்ட உணவுகள், மாதுளை, ஆப்பிள், சிகப்பு செம்பருத்தி பூ, குப்பைமேனி சாறு, சோற்றுக் கற்றாழை, திரிபலா சூரணம் என்று இன்னும் பல மருந்துகள் சித்தர்கள் கூறியுள்ளார்கள் அவற்றை உட்கொண்டு அதற்கான உடற்பயிற்சியினை செய்து பலப்படுத்தி ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.

குருவே சரணம்

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com