காமாட்சியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டதில் ரூ.35.25 லட்சம் காணிக்கை வசூலானது.
காஞ்சிபுரம் உள்ள இக்கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.
அவர்கள் கோயிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அதன்படி, அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில் ஸ்ரீகார்யம் ஏஜென்ட் விஸ்வநாத சாஸ்திரி, அறநிலையத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் புதன்கிழமை காணிக்கை எண்ணப்பட்டது. இதில், ரூ.35 லட்சத்து 25 ஆயிரத்து 626-ம், 205 கிராம் தங்கம், 110 கிராம் வெள்ளியும் வசூலானதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.