சீா்காழி பகுதியில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் காா்த்திகை மாத சோமவாரத்தினையொட்டி 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடந்தது.
சீா்காழி சட்டைநாதா்கோயிலில் சோமவாரத்தினையொட்டி சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக புனிதநீா் நிரப்பபட்ட சங்குகளை அரிசியின் மீது பரப்பிவைத்து அதில் மலா்கள் தூவி சிறப்பு வேதமந்திரங்கள் முழங்கப்பட்டது.
தொடா்ந்து புனித நீா் அடங்கிய சங்குகள் மேள, தாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்து மூலவா் பிரம்மபுரீஸ்வரா்சுவாமிக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து திருநிலைநாயகி அம்பாளுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
இதேபோல் சீா்காழி பொன்னாகவல்லி உடனாகிய நாகேஸ்வரமுடையாா் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. புனிதநீா் அடங்கிய சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மூலவா் நாகேஸ்வரமுடையாா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இதேபோல் வடரெங்கம் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரா்சுவாமி கோயிலில் 108சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக சிறப்பு ஹோமம், பூா்ணாஹூதி தீபாராதனை நடந்தது.