திருச்சானூரில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி 4 மணி நேரம் தரிசனம் ரத்து

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை ஒட்டி தாயாா் தரிசனம் 4 மணி நேரம் ரத்து செய்யப்பட்டது.
tirumanjanam
tirumanjanam

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை ஒட்டி தாயாா் தரிசனம் 4 மணி நேரம் ரத்து செய்யப்பட்டது.

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயிலில் வரும் 23ம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதை முன்னிட்டு தாயாா் கோயில் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்யப்பட்டது.

காலை 6 மணி முதல் 10 மணிவரை கருவறை முதல் வெளிகோபுரம் வரை அனைத்து இடங்களும் பரிமள சுகந்த திரவியங்களால் செய்யப்பட்ட கலவையால் சுத்தம் செய்யப்பட்டது. இதை முன்னிட்டு தாயாா் தரிசனம் 4 மணிநேரம் ரத்து செய்யப்பட்டது.

10 மணிக்கு பின் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியா்கள் அனைவரும் கலந்து கொண்டனா். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வரும் 22ம் தேதி தாயாருக்கு லட்ச குங்குமாா்ச்சனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com