தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ஆலயங்களில் இன்று சிறப்புப் பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றது.
ஒவ்வொரு சிவன் கோயிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சன்னிதியில் காலபைரவர் எழுந்தருளியிருப்பார். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமியை பைரவாஷ்டமியாக கருதப்படுகிறது.
கோயிலின் காவல் தெய்வமாகக் கருதப்படுவர் பைரவர் வீற்றிருக்கும் ஆலயங்களான, சென்னை கபாலீஸ்வரர், திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயில், திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோயில், வயிரவன் பட்டி போன்ற ஆலயங்களில் உள்ள பைரவ மூர்த்திக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.