சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது. மதியம் 2.00 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
செவ்வாய்க் கிழமையான இன்று காலை 8.08 மணி முதல் 11.16 மணி வரை சூரியகிரகணம் நடைபெறுகிறது. கிரகண காலத்தில் தேவஸ்தான கோயில்கள் அனைத்தும் 6 மணி நேரத்துக்கு முன்பாக மூடப்படுவது வழக்கம்.
அதன்படி, டிச.25-ம் தேதி இரவு 11 மணி முதல் டிச.26-ம் தேதி மதியம் 12 மணி வரை என தொடா்ந்து 13 மணி நேரம் ஏழுமலையான் கோயில் மூடப்பட்டுள்ளது.
அதன்பின் கோயில் திறக்கப்பட்டு, புண்ணியாவாசனம் உள்ளிட்டவை நடத்தி மதியம் 2 மணிக்கு மேல் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.
தேவஸ்தானத்துக்கு உள்பட்ட அனைத்துக் கோயில்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.