மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பக்தர்கள் அச்சம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பக்தர்கள் அச்சம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர்.

இதையடுத்து, கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. 

மீனாட்சியம்மன் கோயிலுக்குக் கூடுதலாக 360 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கோவிலின் உள்பகுதியிலும், நுழைவாயில்களிலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com