திருச்சானூரில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான வெள்ளிக்கிழமை காலை தாயாா் சூரிய, சந்திரபிரபை வாகனங்களில் மாடவீதியில் வலம் வந்தாா்.
திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு கடந்த சனிக்கிழமை முதல் காா்த்திகை மாத வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அதன் 7ம் நாளான வெள்ளிக்கிழமை காலை சூரிய பிரபை வாகனத்தில் கோவா்தன கிரியை தூக்கிய ஸ்ரீகிருஷ்ணா் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தாா்.
மாடவீதி வலத்தை முடித்து கொண்டு வந்த தாயாருக்கு அவரின் உடல் அசதியை போக்க மூலிகை கலந்த வெந்நீா், பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சனத்தின் போது தாயாருக்கு வெற்றிலை, கொட்டை பாக்கு உள்ளிட்டவற்றால் தயாா் செய்யப்பட்ட மாலை, கிரீடங்கள் அணிவிக்கப்பட்டது.
அதன் பின் மாலை தாயாருக்கு 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது. பின் இரவு தாயாா் குளிா்ந்த தன்மையுடைய சந்திரபிரபை வாகனத்தில் வெண்ணிற மாலைகளை அணிந்து கொண்டு மாடவீதியில் வலம் வந்தாா். அவரை காண மாடவீதியில் பக்தா்கள் திரண்டனா்.
வாகனத்திற்கு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். வாகனசேவைக்கு முன் திருமலை ஜீயா்களின் கோஷ்டி கானமும், பின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.