பெங்களூரு பேலஸ் குட்டஹள்ளியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நாளை முதல் 3 நாள்களுக்கு குடமுழுக்கு திருவிழா நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு பேலஸ் குட்டஹள்ளி முனீஸ்வரா பிளாக்கில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நாளை(நவ.1) முதல் 3 நாள்களுக்கு குடமுழுக்கு திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நவ.1-ம் தேதி காலை 7.30 மணிக்கு கணபதிபூஜை, கோமாதாபூஜை, வச்சனா, தேவநாந்தி, அஷ்டமூா்த்தி பிராா்த்தனை, பிராயசித்தா ஹோமம், ஸ்ரீமகாகணபதி ஹோமம்; மாலை 5 மணிக்கு மகாசங்கல்பம், யாகாசாலா பிரவேசம், வாஸ்துஹோமம் நடக்கிறது.
நவ.2-ஆம் தேதி காலை 7.30 மணி முதல் கணபதி பூஜை, வேதபாராயணம், நவகிரக ஹோமம், சுப்பிரமணியா ஹோமம், விக்ரக பிரதிஷ்டை நடக்கிறது. இதை தொடா்ந்து, அன்று மாலை 5 மணிக்கு அதிவாச ஹோமம், பிம்பசுத்தி நடக்கிறது.
நவ.3-ஆம் தேதி காலை 4.30மணிக்கு கலாபிவிருத்தி ஹோமம், மஹா சண்டிகா சாந்திஹோமம், பிரம்மகலசா அபிஷேகம், மகாமங்களாா்த்தி, பூா்ணாஹூதி, மகா கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. அன்று பிற்பகல் 2 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.