தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2020 (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)

2020-ம் சார்வரி தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2020 (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)

2020-ம் சார்வரி தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடையவும். 

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

இந்த சார்வரி தமிழ் புத்தாண்டில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் முடங்கிக் கிடந்த செயல்கள் விறுவிறுப்பாக நடக்கத் தொடங்கும். அனுபவ அறிவினால் கடினமான பிரச்னைகளையும் தீர்த்து விடுவீர்கள். பாதிப்படைந்திருந்த உடல் ஆரோக்கியம் சீரடையும்.

உங்கள் முன்னேற்றத்திற்குப் புதியவர்கள் உதவுவார்கள். தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக் கொண்டிருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். நல்லவர்களின் தொடர்பு கிடைக்கும். ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்வீர்கள். கடுமையான உழைப்புக்கு நடுவில் தேவையான ஓய்வெடுத்துக்கொள்வீர்கள்.

நீண்டகால லட்சியங்கள் கனவுகள் நிறைவேற அடித்தளங்களை அமைத்துக்கொள்வீர்கள். அதோடு படித்தவர்களின் துணையோடு காரியங்களை திறமையாகச் செய்து முடிப்பீர்கள். கேள்விக்குறியாக இருந்த பிள்ளைகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உடன்பிறந்தோரிடம் சந்தேகப்படாமல் நேர்மையாகப் பழகி வரவும். 

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். பழைய கடன்களும் வசூலாகும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்திருந்த சலுகைகள் தானாகவே கிடைக்கும். இறைவழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பெரிய முதலீடு செய்யாமல் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு லாபத்தை ஈட்டுவீர்கள். எவரையும் பகைத்துக்கொள்ளாமல் காரியமாற்றவும். குழந்தைகளின் வளர்ச்சியில் பிரத்யேக கவனத்தைக் காட்டவும். அவர்களின் தவறுகளை நாசுக்காக திருத்திவிடவும்.

மற்றபடி உற்றார் உறவினர்கள் நண்பர்களால் ஏற்பட்ட இடையூறுகள் விலகிவிடும். சிலர் புதிய கூட்டாளிகளுடன் இணைவார்கள். பெற்றோருக்குச் சிறிது மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். அநாவசிய சட்டச் சிக்கல்களிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம். வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கு உயரும். சிலருக்குக் கடல் கடந்து செல்லும் யோகமும் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் நடக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உங்கள் திறமையில் குறைவு வராது. அலுவலக ரீதியான பயணங்களையும் சற்று தவிர்த்திடுங்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடிவடையும். கூட்டாளிகள் நட்புடன் பழகுவார்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. காய்கறி வியாபாரம், பால் வியாபாரத்தால் லாபம் காணலாம். குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும்.

புதிய சொத்துகளையும் வாங்குவீர்கள். வயல் வரப்பு பிரச்னைகளில் சாதகமான முடிவு கிடைக்கும் என்றால் மிகையாகாது. அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் நல்ல முன்னேற்றங்களைக் காண்பார்கள். குறிப்பறிந்து பொறுப்புகள் வந்து சேரும். செயல்களை பொறுப்புடனும் பொறுமையுடனும் செய்து மேலிடத்தின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். தொண்டர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றி விடுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் பெற முயற்சிகள் மேற்கொள்வீர்கள். புகழைத் தக்கவைத்துக் கொள்ள சீரிய முயற்சிகள் செய்வீர்கள்.

திறமைகளை வளர்த்துக்கொள்ள பயிற்சிகளைச் செய்வீர்கள். பெண்மணிகளுக்கு பணவரவு அதிகரிக்கும். புதிய ஆடை அணிமணிகள் வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால்  நன்மை அடைவீர்கள். மாணவமணிகள்கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுப்பீர்கள். விரும்பிய துறைகளில்(பாடப்பிரிவுகளில்) சேரும் வாய்ப்பு கிடைக்கும். மறதி ஏற்படாமல் இருக்க பாடங்களை விடியற்காலையில் எழுந்து படிப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் விருப்பப்படி நடந்து கொண்டால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

பரிகாரம்:  தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

இந்த சார்வரி தமிழ் புத்தாண்டில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பொதுவாழ்வில் உங்கள் முயற்சிக்குத் தக்க பாராட்டுகள் கிடைக்கும். சந்தோஷம் தரும் சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடக்கும். மனஉளைச்சலிலிருந்து விடுபடுவீர்கள். சிலர் வசிக்கும் வீட்டைப் பராமரிப்பதற்கு செலவு செய்ய நேரிடும். திறமையான பேச்சினால் மற்றவர்களைக் கவருவீர்கள். பேச்சில் கண்ணியமும் நடையில் கம்பீரமும் உண்டாகும்.

இறுக்கமான சூழல்களை இன்பமயமாக மாற்றி விடுவீர்கள். பூர்வீகச் சொத்துகளில் சமுகமான பாகப் பிரிவினை உண்டாகும். சிலருக்கு அரசு வழியில் கௌரவமும் விருதும் கிடைக்கும். செய்தொழிலில் நல்ல வருமானம் வரத் தொடங்கும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உதவுவார்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். குடும்பத்துடன் வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். உழைப்பிற்கேற்ற பலன்களைப் பெற்று மகிழ்வீர்கள். எதிர்பாராத இடங்களிலிருந்தும் உதவிகளைப் பெறும் காலமிது. 

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நண்பர்களுக்கிடையே இருக்கும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பீர்கள். வரவேண்டிய பணமும் திரும்ப வந்து சேரும். எதிரிகளின் ரகசிய நடவடிக்கைகளை முன்கூட்டியே புரிந்து கொள்வீர்கள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் ஆராய்ச்சி திறன் கூடும். கற்பனை சக்தி அதிகரிக்கும். கொள்கைகளில் தீவிர பிடிப்புடன் இருப்பீர்கள்.  உங்களில் முடிந்த அளவுக்கு
வறியவர்களுக்கு உதவி செய்வீர்கள். சமுதாய முன்னேற்றத்திற்காக பல சிறப்பான கருத்துகளை வெளியிடுவீர்கள். எவரிடமும் அநாவசியப் பேச்சு வேண்டாம். 

எவரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. மேலும் உடலில் ஏதோ வியாதி வந்து விட்டது போன்ற தேவையில்லாத கவலைகளுக்கும் உட்படுவீர்கள். மற்றபடி பொருளாதார நிலை படிப்படியாகச் சீர்படும். புதிய வழிகளிலும் வருமானம் வரக் காண்பீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேர்வீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்களுக்கிருந்த அவமரியாதைகள் நீங்கி மதிப்பு மரியாதை உயரத் தொடங்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இடமாற்றங்கள் சாதகமாக இருக்கும். சம்பள உயர்வுகள் அடைவீர்கள். சக ஊழியர்களுடனான ஒற்றுமை மேம்படும். அவர்களுடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளுக்கும் நல்லெண்ணங்களுக்கும் ஆளாவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும்.  வியாபாரிகளுக்கு பொருளாதாரம் ஏற்றம் இறக்கமாகவே இருக்கும்.

கொடுக்கல் வாங்கல்கள் சீராகும். புதிய வியாபாரத்தில் ஈடுபடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக இருப்பார்கள்.  விவசாயிகளுக்கு வருமானம் குறைந்தாலும் செலவுகள் கூடினாலும் தைரியத்திற்கு குறைவு வராது. தன்னம்பிக்கையின் பயனாக குத்தகை முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். செயல்கள் படிப்படியாக பலன்களைக் கொடுக்கும். விவசாயத் தொழிலாளர்களை அரவணைத்துச் செல்லவும்.

அரசியல்வாதிகள் பொது சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வேலைகளைச் சிரமமின்றி முடித்து விடுவீர்கள். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் அரவணைப்பும் இருப்பதால் எண்ணங்கள் ஈடேறி புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். வீண் பேச்சுகளிலும் வாக்குவாதங்களிலும் ஈடுபட வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைகள் பளிச்சிடும். 

ஒப்பந்தங்கள் நல்ல வருமானத்தைப் பெற்றுத் தரும். சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவு பெருகும். சமயோசித புத்தி வெளிப்படும். பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமையை காண்பார்கள். உற்றார் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்துகொள்ளுங்கள். 

மாணவமணிகள் மகிழ்ச்சி நீடிக்கும் காலகட்டமாகும். பெற்றோர்களால் எதிர்பார்த்த நன்மைகளைஅடைவீர்கள். உழைத்துப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

இந்த சார்வரி தமிழ் புத்தாண்டில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் ஆத்ம பலம் கூடும். உடல்நலம், மனவளம் இரண்டையும் மேம்படுத்திக்கொள்ள யோகா, பிராணாயாமம் செய்யத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனமறிந்து பக்குவமாகப்  பேசத்தொடங்குவீர்கள். கோபப்படாமல் அமைதியாகச் சிந்திப்பீர்கள். உங்களின் அசாதாரண மனவலிமையால் சாதனைகளைச் செய்வீர்கள்.  

நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு செயல்படுவீர்கள். முகத்தில் வசீகரமும்  நடையில் மிடுக்கும்  உண்டாகும். தாயின் மூலமும் அவரின் உறவினர்களின் மூலமும் சில உதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினைகள் நடந்து அமைதி பூத்துக்குலுங்கும். மற்றவர்களின் பிழைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு  திருத்துவீர்கள். உங்கள் நடத்தையில் பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்வீர்கள்.

எதிர்ப்புகளும் பெரிதாக இராது. தத்துவ விஷயங்களில் புதிய விஷயங்களுக்கு சரியான அர்த்தங்களை உணர்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில்களில் ஈடுபடுவீர்கள். குழந்தைகளும் உங்கள் சொல்கேட்டு நடக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. இந்த ஆண்டு கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செல்வாக்கு உயரத்தொடங்கும். சமுதாயத்தில் உயர்ந்தோரைச் சந்திப்பீர்கள். கூட்டாளிகள் மற்றும் நண்பர்களிடம் சகஜமாகப் பழகி ஒற்றுமையை பேணுவீர்கள். 

சமுதாயத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்க அழைப்புகள் வரும். புதிய வீடு, வாகனம், நிலம் ஆகியவைகளை வாங்குவீர்கள். பெற்றோருடன் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தை கௌரவத்துடனும் பெருமையுடனும் நடத்துவீர்கள். அரசாங்கத்தில் உங்கள் செயலுக்கு மதிப்பு கூடும். 

பொருளாதாரம் படிப்படியாக உயரத்தொடங்கும். உங்கள் மீது கடந்த காலத்தில் சுமத்தப் பட்டிருந்த வீண் அபவாதங்களிலிருந்தும் விடுபட்டு விடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கெடுபிடிகள் அதிகமாகும். சிலர் மனச்சோர்வுடன் இருப்பார்கள். உடன்பணிபுரிபவர்களிடம் சகஜமாக பழகவும். விரும்பிய இடமாற்றங்களைப் பெற முடியாமல் போனாலும் மற்றவைகளை தள்ளி விடவேண்டாம். பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்பட்டு பின்னர் மெதுவாகச் சரியாகும். 

வியாபாரிகளுக்கு முயற்சிக்குத் தகுந்த லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். வாடிக்கையாளர்களைக் கவர
புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பெரிய முதலீடுகள் செய்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். இருப்பனவற்றை நேர்த்தியாகச் செய்து கொண்டிருப்பதே நலமாகும். 

கடன்கள் கூடாமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். லாபம் அதிகரிக்கும். விளைபொருள்களை புதிய சந்தைகளுக்கு கொண்டு செல்ல முனைவீர்கள்.  கால்நடைகளுக்கும் செலவு செய்ய நேரிடும்.  நீர்ப்பாசனத்தைப்பெருக்கிக் கொள்ளவும். 

அரசியல்வாதிகள் திட்டமிட்ட வேலைகளில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அனைத்தும் வெற்றி பெறும். சிறு அலைச்சல்கள்  உண்டாகும். உங்கள் பொது சேவையை அனைவரும் பாராட்டுவார்கள். நண்பர்கள்போல் பழகும் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். 

கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் சரியாக முடித்துக் கொடுத்துவிடுவீர்கள். இந்த கட்டத்தில் உங்களின் திறமைகள் வெளிஉலகுக்கு வெளிப்படும். ரசிகர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். 

பெண்மணிகள் இந்த காலகட்டத்தில் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உங்கள் பக்குவமான பேச்சினால் செயற்கரிய செயல்களைச் செய்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

மாணவமணிகளுக்கு நாட்டம் ஏற்படும். இடையூறுகளைச் சமாளிக்கும் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். ஒருமித்த மனத்துடன் படித்து மதிப்பெண்களை அள்ளுவார்கள். சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டுஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

இந்த சார்வரி தமிழ் புத்தாண்டில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைவரும் உங்கள் பேச்சுக்குக் கட்டுப்படுவார்கள். புதிய முயற்சியில் துணிவுடன் ஈடுபடுவீர்கள். செய்தொழிலில் புதிய இலக்குகளை எட்டுவீர்கள். முயற்சிகள் பெரிய வெற்றியைப் பெற்றுத்தரும். ஓர் அதிர்ஷ்ட வாய்ப்பு உங்கள் வாசற்கதவைத் தட்டும் நேரமிது. கடந்த காலத்தில் நிறுத்தி வைத்திருந்த காரியங்களுக்கு  புத்துயிர் கொடுப்பீர்கள். பொருளாதாரம் நல்லபடியாக அமையும். தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். நுட்பமான விஷயங்களையும்  புரிந்துகொள்வீர்கள்.

அரசாங்க அளவிலும் உங்கள் சொல்லுக்கு மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வங்கிகளிடமிருந்து புதிய கடன்களும் கிடைக்கும். இதன்மூலம் செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கடினமான தருணங்களில் சமயோசித புத்தியால் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குப் பயணங்கள் செய்து அதன்மூலம் சிறப்புகளைப் பெறுவீர்கள். இல்லத்தில் நான்குகால் பிராணிகளை வாங்கி வளர்க்கும் யோகமும் உண்டாகும்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பூர்வீகச் சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் நீங்கிவிடும். 

செய்தொழிலையும் நேர்த்தியாக நடத்துவீர்கள். கூட்டாளிகள்,  நண்பர்களின் தலையீடுகள் குறையும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். இல்லத்தில் திருமணம், குழந்தைப்பிறப்பு ஆகியவைகளும் உண்டாகும். உங்களின் சிந்தனைச் சக்தி பலப்படும். எவரையும் குறைசொல்லாமல் பேசி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.

பெற்றோர் வழியிலும் உறவு சீர்படும். வாழ்க்கையில் இருந்த சலிப்புகள் மறையும். பழைய காலத்தில் களவுபோன பொருள் திரும்பக் கிடைக்கும். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். பங்குவர்த்தகத்தின்மூலம் லாபம் கிடைக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

உத்தியோகஸ்தர்களுக்கு பொருளாதாரம் ஏற்றம் பெறும். சிலருக்கு பொறுப்புகள் நிறைய வரும். பணிகளை முடிப்பதற்கு காலக்கெடுவுடன் நிபந்தனைகளையும் எதிர்கொள்ள வேண்டிவரும். சிறப்பாகச் செயலாற்றி மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளிநாடு சென்று வர, வாய்ப்பும் கிட்டும். உடல்நிலையில் சிறிது அக்கறை கொள்ளவும். உடன்பணிபுரிபவர்களால் எந்த உதவியும் கிடைக்காது. சமயோசித புத்தியைக் கையாளவும்.

வியாபாரிகள் வியாபாரத்தில் நிலவி வந்த போட்டி பொறாமைகள் குறைந்து சுமுக நிலையை காண்பார்கள். கவனத்துடன் இருந்து வியாபாரத்தை விரிவுபடுத்தவும். கொடுக்கல் வாங்கல்களில் சிறு சிரமங்கள் உண்டாகும். அதனால் வரவு செலவுகளைக் கவனமாகக் கையாளவும். நண்பர்களிடம் கூட்டாளிகளிடமும் மனக்கசப்புகள் உண்டாகலாம். விவசாயிகளுக்கு சுலபமான காரியங்கள் நிறைவேறும். விளைச்சலைப் பெருக்கி லாபத்தை பெருக்குவீர்கள். எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். புதிய குத்தகைகளை எடுப்பதற்குமுன் சற்று யோசித்துச் செயல்படவும்.

அரசியல்வாதிகள் வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பார்கள். கட்சிப்பணிகளில் நிறைய செலவுகள் உண்டாகும். புதிய பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வீர்கள். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். அதிக பயணங்கள்  மேற்கொள்ள வேண்டி வரும். 

கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். அநாவசிய செலவுகளைச் செய்யாமல் சிக்கனமாக இருப்பது நல்லது. சிறுசிறு தடங்கல்களுக்குப்பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு  பணவரவு அதிகரிக்கும். உங்கள் கோரிக்கைகளை குடும்பத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகத்திலும் ஈடுபடுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். 

மாணவமணிகளுக்கு  படிப்பில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் வெற்றி பெற்று திகழ்வீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். உடற்பயிற்சிகள், யோகா, பிராணாயாமம் செய்வது நல்லது.

பரிகாரம்:  துர்க்கையை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com