ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து 9 ஆம் நாளான புதன்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தாா்.
விழாவையொட்டி காலை 6.30-க்கு முத்துக்குறி திரு ஆபரணங்களை சூடியபடி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் 7 மணிக்கு எழுந்தருளினாா்.
அங்கு அலங்காரம், அமுது செய்யத் திரையிடப்பட்டு காலை 8 மணி முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசம், சமூக இடைவெளியுடன் நம்பெருமாளைத் தரிசித்து வருகின்றனர். இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அனுமதியில்லை.
வைகுந்த ஏகாதசி பகல்பத்து 9-ஆம் நாளான புதன்கிழமை முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.