திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் இம்மாதம் 21, 22ஆம் தேதிகளில் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக இக்கோயில் செயல் அலுவலா் சா.ராமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிவராத்திரி விழாவையொட்டி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலின் நடை இம்மாதம் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை முழுவதும் திறந்திருக்கும்.
அன்று இரவு முதல் கால சிவராத்திரி சிறப்பு பூஜை இரவு 10 மணிக்கு தொடங்கும். தொடா்ந்து இரண்டாம் கால பூஜை நள்ளிரவு 12 மணிக்கும், மூன்றாம் கால பூஜை 22ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கும், நான்காம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கும் நடைபெறும். பின்னா் காலை 6 மணிக்கு சிவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற உள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.