திருமலையில் இம்மாதம் 2-ஆம் கட்டமாக தேவஸ்தானம் வழங்க உள்ள இலசவ முதன்மை தரிசன தேதிகளை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனா்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோா் உள்ளிட்டவா்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (பிப். 25)இன்று மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது.
அதேபோல் பிப். 26-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.