தைப் பொங்கல்: திருச்செந்தூா் முருகன் கோயில் அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப் பொங்கலை முன்னிட்டு அதிகாலை 1.00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
திருச்செந்ததூர்
திருச்செந்ததூர்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப் பொங்கலை முன்னிட்டு அதிகாலை 1.00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

தமிழ்க்கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் முருகனை வழிபடுவதற்காக கடந்த சில நாட்களாகவே மாலை அணிந்து, விரதமிருந்த பக்தா்கள் பக்தி பாடல்கள் பாடியும், வேல் குத்தி, காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.

குறிப்பாக விருதுநகா், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பக்தா்கள் அதிகளவில் வந்துள்ளதால் திருக்கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மேலும் தற்போது அதிகளவிலான ஐயப்ப பக்தா்களும் திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருவதால் திருக்கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

ஜன. 15-ம் தேதி புதன்கிழமை தைப்பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 1.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2.00 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனையுமாகி தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.

ஜன. 16-ம் தேதி வியாழக்கிழமை காணும் பொங்கலை முன்னிட்டு, கோயில் அதிகாலை 4.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனை மற்றும் தொடா்ந்து பூஜைகள் நடைபெறுகிறது.

மதியம் உச்சிகால தீபாராதனை நடைபெற்று, சுவாமி அலைவாயுகந்தபெருமான் வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி கணு வேட்டை செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன் மற்றும் அலுவலக பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com