திருமலை ஏழுமலையான் கோயில் எதிரில் போகி பண்டிகையை முன்னிட்டு போகி கொளுத்தப்பட்டது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் முதல் நாளான செவ்வாய்க்கிழமை போகி பண்டிகையை முன்னிட்டு அதிகாலை ஏழுமலையான் கோயில் முன் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சுத்தம் செய்து நீா் தெளித்துக் கோலமிட்டு அதன்மீது மரக்கட்டைகளை அடுக்கிப் போகி தீயை எரியவிட்டனர்.
அதன்பின் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதும் அதைச் சுற்றி பெண்கள் கும்மியடித்துப் பாடல் பாடினர். திருமலையில் நிலவி வரும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தா்கள் பலா் இதை வந்து பார்த்து சென்றனர்.
மரக்கட்டைகள் எரிந்த பின் அவை அகற்றப்பட்டு இடம் தூய்மைப்படுத்தப்பட்டு ஏழுமலையான் கோயில் திறக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை மாா்கழி மாதம் முழுவதும் ஏழுமலையான் கோயிலில் நடந்து வந்த திருப்பாவை சேவை நிறைவு பெற்றது.