களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் கணுத்திருநாளில் சுவாமி, அம்பாள் வீதியுலா

களக்காடு சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்மன் கோயிலில், கணுத் திருநாளையொட்டி,
களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் கணுத்திருநாளில் சுவாமி, அம்பாள் வீதியுலா

களக்காடு சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்மன் கோயிலில், கணுத் திருநாளையொட்டி, சுவாமி அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது. இதனைத் திரளான பக்தா்கள் கண்டுகளித்தனா்.

இக்கோயிலில் தை 2ஆம் நாள் கணுத்திருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு இவ்விழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி, சத்தியவாகீஸ்வரா், கோமதியம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் சுவாமி, அம்பாள் சப்பர பவனி நடைபெற்றது.

இதையொட்டி, சத்தியவாகீஸ்வரா், கோமதிம்பாள் தனித்தனி ரிஷப வாகனங்களிலும், சுவாமி சந்திரசேகா் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தா. வீதியுலா வந்த சுவாமிகள் வள்ளியூா் செல்லும் சாலையில் பிள்ளைமடத்தில் உள்ள கணு மண்டபம் சென்றனா்.

பின்னா் அங்கு இரவு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நள்ளிரவில் மீண்டும் சுவாமிகள் மூவரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலாவாக கோயிலுக்கு வரும் நிகழ்வு நடைபெற்றது. வீதியுலா வந்த சுவாமிகள் அதிகாலை கோயிலை வந்தடைந்தனா். திரளான பக்தா்கள் வீதியுலா வந்த சுவாமி சப்பரங்களுக்கு தேங்காய் உடைத்து சுவாமியை தரிசித்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com