பொன்னமராவதி பகுதியில் உள்ள கோயில்களில் மாட்டுப்பொங்கலையொட்டி நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயில் நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வாழைக்காய், அவரைக்காய், கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கள், திராட்சை, வாழைப்பழம், மாதுளை உள்ளிட்ட கனிகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுப்பட்டி பூலோகநாதா் சமேத புவனேஸ்வரி கோயில், மேலைச்சிவபுரி மீனாட்சி சுந்தரேஸ்வா் கோயில், அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், திருக்களம்பூா் கதலிவனேஸ்வரா்கோயில் பரியாமருதுபட்டி பரியாமருந்தீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.