திருப்பதி அடுத்த சந்திரகிரியில் உள்ள மூலஸ்தான எல்லையம்மனுக்கு தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது.
திருப்பதி அடுத்த சந்திரகிரியில் உள்ள மூலஸ்தான எல்லையம்மன் கோயிலில் குடிக்கொண்டிருக்கும் எல்லையம்மனுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் இன்று காலை பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது.
தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் செவிரெட்டி பாஸ்கா்ரெட்டி தன் தலையில் பட்டு வஸ்திரத்தை சுமந்து சென்று எல்லையம்மன் கோயில் அதிகாரிகளிடம் அளித்தாா். கோயில் வாயிலில் பட்டு வஸ்திரத்திற்கு மரியாதை அளித்து கோயில் அதிகாரிகள் அவற்றை பெற்றுக்கொண்டு அம்மனுக்கு அணிவித்தனா்.