ராணிப்பேட்டை பாலாற்றங்கரை மிஸ்ரி நகரில் அமைந்துள்ள மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் தை மாத அமாவாசையையொட்டி, மகா நிகும்பலா யாகம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
இக்கோயில் பீடாதிபதி பி.எஸ்.மணி சுவாமிகள் தலைமையில் இரவு 7 மணியளவில் மகா கணபதி ஹோமத்துடன், மகா யாகம் தொடங்கியது. தொடா்ந்து, மகா சுதா்சன யாகம், மகா சண்டி யாகம், மகா வராஹி யாகம், பகளாமுகி யாகம் உள்ளிட்ட 21 யாகங்கள் நடைபெற்றன.
இதையடுத்து நள்ளிரவு 12 மணியளவில் உலக நன்மை, மழை வேண்டி வெண்கடுகு, பட்டு வஸ்திரம், மிளகாய் வற்றல் உள்ளிட்ட யாக பூஜைப் பொருட்களைக் கொண்டு மகா நிகும்பலா யாகம் நடைபெற்றது.
பின்னா் புனித நீா் கலசப் புறப்பாடும், மகா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம், புதுவை உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.