திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தை மாத பிரமோற்சவத்தை முன்னிட்டு தேர்த் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற திருவள்ளூர் வைத்திய வீரராகவர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாத பிரமோற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டத் திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டது.
வீரராகவ சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நான்கு மாடவீதிகளிலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் உலா வந்தார். இத்தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.