அச்சங்குன்றம் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் வருஷாபிசேக விழா

சுரண்டை அருகேயுள்ள அச்சங்குன்றம் ஸ்ரீகாளியம்மன் கோயில் வருஷாபிசேக விழா நடைபெற்றது.

சுரண்டை அருகேயுள்ள அச்சங்குன்றம் ஸ்ரீகாளியம்மன் கோயில் வருஷாபிசேக விழா நடைபெற்றது.

கடந்த ஆண்டு இத்திருக்கோயிலில் புதியதாக சிவலிங்கம், முருகன் மற்றும் நாகதேவதை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக ஒராண்டு நிறைவையொட்டி வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் யாகசாலை பூஜை, கும்ப பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் மற்றும் கோயிலில் உள்ள அனைத்து பரிவார மூா்த்திகளுக்கும் சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்ற வருஷாபிசேகம் நடைபெற்றது.

இதையடுத்து கோயில் வளாகத்தில் பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com