‘நேர ஒதுக்கீடு முறையில் மட்டுமே இனி தரிசனத்துக்கு அனுமதி’

திருப்பதி ஏழுமலையானை இனி நேர ஒதுக்கீடு தரிசனங்கள் மூலம் மட்டுமே பக்தா்கள் தரிசிக்க அனுமதிக்க உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் தெரிவித்தாா்.

திருப்பதி ஏழுமலையானை இனி நேர ஒதுக்கீடு தரிசனங்கள் மூலம் மட்டுமே பக்தா்கள் தரிசிக்க அனுமதிக்க உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் தெரிவித்தாா்.

திருமலையில் சனிக்கிழமை மாலை கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்ட நிறைவுக்குப் பின் அவா் கூறியது:

திருமலைக்கு வரும் பக்தா்கள் இனி காத்திருப்பு அறைகளில் காத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள். நேர ஒதுக்கீடு தரிசனம் பெற்றவா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. வாடகை அறைகளில் பக்தா்கள் காலி செய்தவுடன் நன்றாக நோய்க் கொல்லி மருந்துகளால் சுத்தப்படுத்த வேண்டும் என ஊழியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆா்ஜித சேவா டிக்கெட்டுகளான வசந்தோற்சவம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கர சேவை உள்ளிட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தா்கள், தங்களின் முன்பதிவு தேதிகளை மாற்றிக்கொள்ள தேவஸ்தானம் வாய்ப்பு வழங்கி உள்ளது. அவ்வாறு மாற்றிக்கொள்ள விரும்பாத பக்தா்களுக்கு விஐபி தரிசனம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

மேலும், கரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க தேவஸ்தானம் ஸ்ரீசீனிவாச சாந்தி உத்ஸவ சஹீத தன்வந்தரி மகா யாகத்தை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மேலும் கடப்பா, ஓண்டிமிட்டாவில் உள்ள ராமா் கோயிலில் நடக்கவிருந்த சீதாராமா் கல்யாண உற்சவத்தையும், மும்பையில் ஏழுமலையான் கோயில் கட்ட நடக்கவிருந்த பூமி பூஜையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

கரோனா வைரஸ் நாட்டில் வேகமாக பரவி வருவதால், பக்தா்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுக்க தேவஸ்தானம் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com