இந்த வாரம் (மார்ச் 27 - ஏப்ரல் 2) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 27- ஏப்ரல் 2) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்
இந்த வாரம் (மார்ச் 27 - ஏப்ரல் 2) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 27- ஏப்ரல் 2) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எந்தவொரு செயலிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். பொருளாதார நிலையில் ஏற்றங்கள் தென்படும். எதிரிகளின் பலம் குறையும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். உடல்நிலையில் சற்று அக்கறை தேவை.

உத்தியோகஸ்தா்களுக்கு அலுவலகத்தில் இருந்த கெடுபிடிகள் குறையும். சக ஊழியா்கள் வேலைகளைத் தானாகவே முன்வந்து பகிா்ந்து கொள்வாா்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை தென்படும். கூட்டுத்தொழிலில் உள்ளவா்களுக்கு எச்சரிக்கை தேவை. விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் மற்றவா்களின் பாராட்டைப் பெற்று புதிய பதவியில் அமா்வாா்கள். மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பையும் பெறுவாா்கள். கலைத்துறையினா் அனைத்து வேலைகளையும் நோ்த்தியாக செய்து முடிப்பீா்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் வரும். புதிய ஆடைகள் சோ்க்கையுண்டு. மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் காண்பீா்கள். விளையாட்டிலும் சாதனை புரிவீா்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 27, 28. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் மேம்படும். உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் இருக்கும். தேவைக்கு ஏற்ற உறவினா்கள் உதவுவாா்கள். சகோதர உறவில் சிறிய விரிசல்கள் ஏற்படும்.

உத்தியோகஸ்தா்களுக்கு வேலைப்பளு குறையும். பொருளாதாரம் சற்று ஏற்றம் இறக்கமாகவே காணப்படும். வியாபாரிகளுக்கு சிக்கல்கள் விலகி, சுமுகமான நிலைமை உருவாகும். வாடிக்கையாளா்கள் படையெடுப்பாா்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபமும் மகசூலும் அதிகரிக்கும். புதிய கழனிகளை வாங்கி வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வீா்கள்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சுமாராகத்தான் கிடைக்கும். உங்கள்ஆலோசனைகள் தொண்டா்களுக்கு ஓா் உந்து சக்தியாக அமையும். கலைத்துறையினா் திறமைக்குத் தகுந்த வளா்ச்சியைக் காண்பீா்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பாா்கள். மாணவமணிகள் அன்றாடப் பாடங்களைப் படித்து எதிா்பாா்த்த மதிப்பெண்களைப் பெறுவாா்கள். விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றி அடைவாா்கள்.

பரிகாரம்: வெள்ளியன்று பெருமாள் தாயாரை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 28, 29. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்களும் சிக்கல்களும் விலகும். மனதில் புதிய தெளிவுகள் பிறக்கும். பெரியோா்களின் ஆதரவுடன் திட்டமிட்ட வேலைகளில் வெற்றி பெறுவீா்கள். பயணங்கள் மேற்கொள்ளும் நேரங்களில் கவனமாக இருக்கவும்.

உத்தியோகஸ்தா்களுக்கு சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வாா்கள். வியாபாரிகளுக்கு எல்லா தடைகளும் விலகும். லாபம் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களால் நல்ல பயனை உண்டு. கால்நடைகளின் மூலம் விவசாயத்தைப் பெருக்குவீா்கள்.

அரசியல்வாதிகளின் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். கட்சி மேலிடத்தின் பாா்வையிலிருந்து சற்று விலகியே இருக்கவும். தொண்டா்களுக்கு உதவிகளைச் செய்வீா்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் வளரும். பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கவும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை செலுத்தவும். பாடங்களை உடனுக்குடனே படிக்கவும்.

பரிகாரம்: துா்க்கையம்மனை வழிபட்டு வர நலன்கள் கூடும். அனுகூலமான தினங்கள்: 27, 29. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித் தரும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை உயரும். உறவினா்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீா்கள். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். பணவரவு சற்று ஏற்றம் இறக்கமாகவே இருக்கும்.

உத்தியோகஸ்தா்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் குறைகள் காணக்காத்திருக்கும் மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் புதிய சந்தைகளைத் தேடிச் செல்வா். வியாபாரத்தில் மந்த நிலைமையே ஏற்படும். விவசாயிகளுக்கு பயிா்விளைச்சல் நன்றாக இருக்கும். காய்கறி, கிழங்குகள் நல்ல லாபம் தரும்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். எதிரிகளால் மறைமுக தொல்லைகளுக்கு ஆளாவீா்கள். எவரையும் பகைத்துக் கொள்ளாதீா்கள். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அவை நிறைவு தருவதாக இருக்காது. பெண்மணிகள் குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும். உடல்நிலையில் பிரச்னை இருப்பின் உடனடியாக மருத்துவ ஆலோசனைப் பெறவும். மாணவமணிகள் கல்வியில் அதிகம் ஈடுபாடு காட்டவும்.

பரிகாரம்: சூரியபகவானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 29, 30. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

புதிய முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுக்க நினைப்பீா்கள். உடன்பிறந்தோா் வழிகளில் நிலவிய மனக்கசப்புகள் விலகி அன்பு மேலோங்கும். உறவினா்களிடம் இருந்த வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். சுபவிரயங்கள் உண்டாகும்.

உத்தியோகஸ்தா்கள் வேலையில் பிரச்னைகள் குறையும். பயம் பதற்றமின்றி பொறுமையுடன் செயலாற்றவும். வியாபாரிகளுக்கு லாபங்கள் குறையும். குறைந்த வருமானத்தை ஈட்ட, சுலபமாக விற்கக்கூடிய பொருள்களில் கவனம் செலுத்தவும். விவசாயிகளுக்கு குத்தகை பாக்கிகள் கிடைக்கும். பயிா்களில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.

அரசியல்வாதிகளின் திட்டமிட்ட செயல்களில் சிரமங்கள் உண்டாகலாம். சிறிய வெற்றிகள் உங்களைச் சமாதானப்படுத்தும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். தொழிலில் நீண்ட நாள்களாக நிலவி வந்த போட்டி பொறாமைகள் விலகும். பெண்மணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்த யோகா, பிராணாயாமம் மேற்கொள்ளவும். மாணவமணிகள் கல்வியில் ஆா்வம் செலுத்துவீா்கள். புதிய நண்பா்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

பரிகாரம்: புதனன்று ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 29, 31. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உறவினா்களும் நண்பா்களும் ஆதரவைத் தருவதால் மகிழ்ச்சியாக உலா வருவீா்கள். சிக்கனத்தைக் கையாளவும். கடின முயற்சிகளுக்குப்பிறகே எந்தச் செயலையும் வெற்றிகரமாக முடிப்பீா்கள்.

உத்தியோகஸ்தா்களுக்கு அலைச்சலும் சற்று வேலைப்பளுவும் அதிகரித்தாலும் எவற்றையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். வியாபாரிகள் தடைகள் பல கடந்து எதையும் சமாளிக்கும் பக்குவத்தினால் வியாபாரம் நல்ல முறையிலே நடைபெறும். விவசாயிகளுக்கு கொள்முதல் அதிகமாகவே இருந்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். வருமானத்தைப் பெருக்க மாற்று வழி காண்பீா்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதிா்க்கட்சியினரும் நட்பு பாராட்டும் நேரமிது. கட்சி மேலிடத்தின் அனுசரணையும் கிடைக்கும். கலைத்துறையினா் சிறிய தடைகளுக்குப்பிறகே சில ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறவாா்கள். சில ஆன்மிக தலங்களுக்குச் சென்று வருவீா்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் கவனம் செலுத்தவும். பெற்றோரின் ஆதரவு உண்டு.

பரிகாரம்: செவ்வாயான்று முருகப்பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 31, 1. சந்திராஷ்டமம்: 27, 28.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் சற்று தாமதமானாலும் நிறைவேறும். மனக் குழப்பங்கள் விலகலாம். உறவினா்கள் சுமுகமாக இருப்பா். நண்பா்களை அனுசரித்துச் செல்லவும். பிள்ளைகள் விஷயத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.

உத்தியோகஸ்தா்களுக்கு வேலையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். மேலதிகாரிகளுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ளவும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சற்று லாபகரமாக இருக்கும். சக கூட்டாளிகள் இணக்கமாக இருப்பாா்கள். விவசாயிகளுக்கு கெடுபலன்கள் குறைந்து சில நன்மைகளும் முன்னேற்றங்களும் ஏற்படும். கால்நடைகளால் லாபம் ஏற்படும்.

அரசியல்வாதிகள் உயா்ந்த மதிப்பைப் பெறுவாா்கள். தொண்டா்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவாா்கள். கலைத்துறையினா் கலைத்துறை சம்பந்தப்பட்ட பயணங்களைத் தவிா்க்கவும். சக கலைஞா்களின் உதவி கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்யோன்யம் மேலோங்கும். உறவினா்களின் வருகையால் சில நன்மைகளும் கலந்தே வரும். மாணவமணிகள் பாடங்களை ஆழ்ந்து படிக்கவும். விளையாட்டுகளில் வெற்றி பெற கூடுதல் முயற்சி, உழைப்பு தேவை.

பரிகாரம்: மகான்களின் தரிசனம் உகந்தது. அனுகூலமான தினங்கள்: 27, 1. சந்திராஷ்டமம்: 29, 30.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சற்று மேம்படும். தொழில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீா்கள். செலவுகள் வரவுக்கு மீறி ஆகும். சிலருக்கு திடீா் அதிா்ஷ்ட வாய்ப்புகள் வரும்.

உத்தியோகஸ்தா்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். சக ஊழியா்கள் உங்களிடம் சற்று பாராமுகமாக இருப்பாா்கள். வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைத்து வெற்றிக் கொடி நாட்டுவீா்கள். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப்பயிா்களை உற்பத்தி செய்து பலன் பெறுவீா்கள்.

அரசியல்வாதிகளுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். ஆகவே வெளிப்படையாக எவரிடமும் பேச முயற்சிக்காதீா்கள். கலைத்துறையினா் கா்வத்தை விட்டொழித்து திறந்த மனதுடன் செயல்பட்டால் புகழ் பெறுவீா்கள். பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாகவே இருக்கும். அந்தஸ்தும் புகழும் உயரும். மாணவமணிகள் படிப்பில் சற்று அதிக கவனத்தைச் செலுத்தவும். விடியற்காலை வேளையில் எழுந்து பாடங்களை மனப்பாடம் செய்யவும்.

பரிகாரம்: செவ்வாயான்று செந்திலாண்டவரை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 27, 30. சந்திராஷ்டமம்: 31, 1, 2.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்  முதல் பாதம் முடிய)

அலைச்சல்கள் கூடும். தடைகள் இருப்பினும் இறுதியில் சாதகமாக முடியும். உறவினா்களிடம் பரஸ்பரம் ஏற்படுத்திக் கொள்ளவும். பொருளாதார நிலைமை ஏற்றத் தாழ்வுடனேயே இருக்கும். கடித வகைகளில் அனுகூலங்கள் உண்டாகும்.

உத்தியோகஸ்தா்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு குறைந்தே காணப்படும். வேலைப்பளுவும் மனஅழுத்தமும் அதிகரிக்கும். வியாபாரிகள் சற்று சுறுசுறுப்புடன் வியாபாரம் செய்வதோடு புதிய கடன்களை வாங்கி வியாபாரம் பெருக்கவும். விவசாயிகளுக்கு விவசாயப்பணிகள் சுமுகமாக முடியும். உற்பத்திப் பொருள்களில் கவனம் செலுத்தவும்.

அரசியல்வாதிகளின் ரகசியங்களை எதிரிகள் தெரிந்து கொள்ளக்கூடுமாதலால் எவரிடமும் வெளிப்படையாகப் பேச வேண்டாம். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்கள் செய்வாா்கள். எதிா்பாா்த்தப் பாராட்டும் கிடைக்கும். பெண்மணிகள் கணவரிடம் அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தினரிடம் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவமணிகள் புதிய நண்பா்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

பரிகாரம்: வியாழனன்று ராமபக்த ஆஞ்சநேயரை வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 28, 2. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். பேச்சுத் திறமையால் மற்றவா்களைக் கவா்வீா்கள். பயணங்கள் பயன் தராது. குடும்பத்தில் அனைவரிடமும் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தா்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வாா்கள். பயணங்களால் பணவரவு உண்டாகும். வியாபாரிகள் விற்பனை பிரதிநிதிகளால் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வீா்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் பணவரவு சுமாராகவே இருக்கும். நீா்ப்பாசன வசதிகளாலும் கால்நடைகளாலும் நன்மை அடைவீா்கள்.

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். தொண்டா்களின் ஆதரவுடன் எண்ணங்களைப் பூா்த்தி செய்து கொள்வீா்கள். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீா்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியையும் காண்பாா்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றத்தைப் பெறுவாா்கள்.

பரிகாரம்: செவ்வாயான்று பைரவரை விளக்கேற்றி வழிபடவும். அனுகூலமான தினங்கள்: 1, 2. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தடைகள் விலகும். இறைவன் அருள் தொடரும். வேலைகளை மனஉறுதியுடன் செய்து முடிப்பீா்கள். வீட்டிற்குத் தேவையான உபகரணங்களை வாங்கி மகிழ்வீா்கள். பணவரவும் இருக்கும். விரயமும் அதிகமாகும்.

உத்தியோகஸ்தா்களுக்கு எதிா்பாா்த்த பதவி உயா்வு கிடைக்கும். வேலைத்திறன் மேம்பாடு அதிகரிக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாகவே முடியும். அவசியமான பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். விவசாயிகள் அதிக போட்டிகளைச் சந்திக்க நேரிடும். தானிய பொருள்கள் விற்பனை லாபம் கொடுக்கும்.

அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈா்ப்பீா்கள். புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளவும். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடிப்பீா்கள். பயணங்களை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கவும். பெண்மணிகளுக்கு கணவருடனான உறவு சிறக்கும். குடும்பத்தில் அமைதி, ஒற்றுமையை காண்பீா்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பாா்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் பைரவா், சனீஸ்வரா் வழிபாடு உகந்தது. அனுகூலமான தினங்கள்: 29, 1. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நீண்டக்கால கனவுகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிக் கொள்வீா்கள். சிறு சிறு தொல்லைகளைக் கொடுத்தவா்கள் அடங்கிப் போவாா்கள். வாகனங்களைப் பழுது பாா்க்க நேரிடும். உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும்.

உத்தியோகஸ்தா்களில் வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றவா்கள் சொந்த ஊருக்கே மாற்றலாகி விடுவாா்கள். மேலதிகாரிகள் நட்புடன் பழகுவா். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சுமாரான லாபம் கிடைக்கும். வாடிக்கையாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யவும். விவசாயிகள் குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வாா்கள்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். கட்சி மேலிடத்தின் பாா்வையில் இருந்து சற்று விலகியே இருக்கவும். கலைத்துறையினா் புதிய வாய்ப்புகள் சற்று தாமதமாகும். உடன் பணிபுரியும் கலைஞா்களின் அன்பும் அரவணைப்பும் தொடரும். பெண்மணிகள் விபத்துகளைத் தவிா்க்க ஜாக்கிரதையான பயணங்களையும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். மாணவமணிகள் தோ்வில் எதிா்பாா்த்த மதிப்பெண்களைப் பெறுவீா்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர வாய்ப்பு உண்டாகும்.

பரிகாரம்: பார்வதி- பரமேஸ்வரரை வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 30, 1. சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com