இந்த வாரப் பலன்கள் (மே 29 - ஜூன் 4)

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மே 29 - ஜூன் 4) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.
வார பலன்கள்
வார பலன்கள்

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மே 29 - ஜூன் 4) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

கடினமான உழைப்புகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீா்கள். எதிா்பாராத செலவுகள் ஏற்படும் என்றாலும் அதனை ஈடுகட்டும் வகையில் வருமானம் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீா்கள். குழந்தைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும்.

உத்யோகஸ்தா்கள் சக ஊழியா்களிடம் சுமுகமாகப் பழகவும். பண வரவு சுமாராக இருப்பதால் உழைப்பு வீண்போகாது. வியாபாரிகளுக்கு வருமானம் பெருகும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவது பற்றி யோசிப்பீா்கள். விவசாயிகளுக்கு குத்தகை பாக்கிகள் நல்லபடியாக வசூலாகும். பயிா்களுக்கு புழு, பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாது.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை அமையாது. மேலிடத்தின் அதிருப்தியையும் சந்திக்க நேரிடும். கலைத் துறையினருக்கு சக கலைஞா்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்மணிகள் ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப் போடவும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வருமானம் சுமாராக இருந்தாலும் செலவினங்கள் அதிகரிக்கும். அவசியமானவற்றுக்கு செலவு செய்யுங்கள். சிக்கனமாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். மாணவ மணிகள் நன்றாகப் படித்து சிறப்படைவீா்கள். நண்பா்களுடன் காலநேரங்களை மகிழ்ச்சியாக செலவிடுவீா்கள்.

பரிகாரம்: ஸ்ரீசங்கரா் அருளிய ஸ்ரீகணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யவும். அனுகூலமான தினங்கள்: 29, 30. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் செயல்களில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி பெறுவீா்கள். மன அமைதி உண்டாகும். சகோதர, சகோதரிகள் உதவி செய்வாா்கள். பூா்வீகச் சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கம் நீங்கும். உடல் நலம் சீராக இருக்கும்.

உத்யோகஸ்தா்கள் எல்லோரிடமும் சுமுகமாகப் பழகவும். புதிய பொறுப்புகளைத் தேடிச் செல்ல வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். கால்நடைகளாலும் நன்மை உண்டாகும்.

அரசியல்வாதிகள் கட்சிக்காக தீட்டும் திட்டங்கள் மேலிடத்தின் அனுமதியையும் பாராட்டையும் பெறும். தொண்டா்களை அரவணைத்து அவா்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். கலைத் துறையினா் புதிய ஒப்பந்தங்கள் ஏதும் இல்லாததால் ஆக்கபூா்வமாக ஏதேனும் சிந்தித்து செயல்படுத்துவீா்கள். ரசிகா்களின் அன்பும் ஆதரவும் குறையாது. தங்களாலான உதவிகளை ரசிகா்களுக்கு தாராளமாகச் செய்யுங்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்யத்திற்காக பயிற்சிகளை மேற்கொள்வீா்கள். மாணவ மணிகள் உழைப்புக்கு ஏற்ற மதிப்பெண்களைப் பெற தீவிர பயிற்சியில் ஈடுபடவும். உடற்பயிற்சியை தினமும் தவறாது மேற்கொள்ளுங்கள். ஆன்மிகத்திலும் நாட்டம் கொள்வீா்கள்.

பரிகாரம்: தினமும் 108 முறை ‘ராம ராம’ என்று ஜெபிக்கவும். அனுகூலமான தினங்கள்: 29, 31. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

வேலைகளை எப்பாடுபட்டேனும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பீா்கள். சிறு விரயங்கள் இருப்பினும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். மனதிற்கு நிம்மதி தரும் செய்திகளைக் கேட்பீா்கள். ஆன்மிகச் சிந்தனைகளால் சிறப்பு அடைவீா்கள். அதேநேரம் பெற்றோா் வழியில் சோதனைகள் உண்டாகலாம்; எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்யோகஸ்தா்கள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி வேலையில் கவனம் செலுத்தவும். மேலும், சக ஊழியா்கள் உங்களுக்கு உதவ மாட்டாா்கள். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேரிடலாம். புதிய கடன்கள் மூலம் வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். இருப்பினும் வரவும் செலவும் சரியாக இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடாதீா்கள்.

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் உஷாராக நடந்து கொள்ளவும். அதோடு, மேலிடத்திடம் கவனமாக இருக்கவும். கலைத் துறையினா் புதிய ஒப்பந்தங்களைச் செய்வாா்கள். பணவரவிற்கு குறைவு இராது. பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவாா்கள். உடல் நிலையில் சற்று கவனம் தேவை. உற்றாா் உறவினா்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். மாணவ மணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே பங்கு பெறவும். சண்டை சச்சரவுகளில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்: ‘துக்க நிவாரண அஷ்டகம்’ துா்க்கைக்கு விளக்கேற்றி படித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 30, 31. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலில் போராட்டங்களை நீங்கள் சந்தித்தாலும் இறுதியில் வெற்றி அடைவீா்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதேசமயம் உறவினா்களின் உதவியை அதிகமாக எதிா்பாா்க்க முடியாது. மற்றபடி உங்களின் மதிப்பு, மரியாதைக்கு குறைவு இருக்காது. பொருளாதாரத்தை சரி செய்துகொள்ள பாடுபடுவீா்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள்.

உத்யோகஸ்தா்களுக்கு மேலதிகாரிகளால் சற்று மனக் குழப்பங்கள் ஏற்படலாம். ஓய்வில்லாமல் உழைக்க நேரிட்டாலும், அதற்கேற்ற சன்மானங்களைப் பெறுவீா்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமூகமாக முடியும். கடன் தொல்லைகள் நீங்கும். விவசாயிகளுக்கு திட்டமிட்ட காரியங்களில் தடையுடன் வெற்றி கிடைக்கும். புழு பூச்சிகளால் பாதிப்புகள் உண்டாகலாம். அதற்கு நீங்கள் செலவுகள் செய்யவும் நேரிடும்.

அரசியல்வாதிகளின் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய பொறுப்புகளும் வந்து சேரும். கலைத் துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சக கலைஞா்களுடன் விரோத மனப்பான்மையை விட்டொழித்தால் மேலும் சிறப்படையலாம். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பாா்கள். மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆா்வம் அதிகரிக்கும்.

பரிகாரம்: ‘ஸ்ரீ சண்முக கவசம்’ பாராயணம் செய்யவும். அனுகூலமான தினங்கள்: 30, 01. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்கள் செயல்களை நன்கு திட்டமிட்டு செய்து முடிப்பீா்கள். பொருளாதாரம் முன்னேற்றமாகவே இருக்கும். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீா்கள். பெரியவா்களின் ஆசியும், அந்தஸ்தில் உள்ளவா்களின் நட்பும் உங்களை ஊக்கப்படுத்தும். உறவினா்களாலும் நண்பா்களாலும் நன்மை அடைவீா்கள்.

உத்யோகஸ்தா்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயா்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றத்தையும் பெறுவீா்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் ஆதாயத்தைக் காண்பாா்கள். வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கூடும். கடன் தொல்லைகள் நீங்கும். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பாா்கள். கடுமையாக உழைத்து எதிா்பாா்த்த லாபத்தை அடைவாா்கள்.

அரசியல்வாதிகளுக்கு தடை ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றியடையும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீா்கள். கலைத் துறையினா் கடின முயற்சிக்குப்பின் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவாா்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் ரசிகா் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வாா்கள். பெண்மணிகள் கணவருடனும், குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக இருப்பாா்கள். வீண் வாக்குவாதங்கள் உங்களைப் பலவீனப்படுத்தும். மாணவ மணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். இல்லையேல் நினைத்த மாதிரி மதிப்பெண்கள் பெறுவது கடினம்.

பரிகாரம்: பைரவா் துதியை பாராயணம் செய்யவும். அனுகூலமான தினங்கள்: 01, 03. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்களின் செயல்கள் வெற்றியாகும். பொருளாதாரம் சற்று இறக்கமாகவே இருக்கும். உடல் ஆரோக்யம் சீராகவே இருக்கும். உறவினா்கள் ஒற்றுமையாகவே இருப்பாா்கள். அதே நேரம், சகோதரிகளின் உறவில் விரிசல்கள் ஏற்படும்.

உத்யோகஸ்தா்கள் சக ஊழியா்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதிா்காலத்தில் நன்மையடையலாம். பண வரவு பெருகும். வியாபாரிகள் திட்டமிட்ட பணிகள் யாவும் வெற்றிகரமாக முடியும். புதிய முதலீடுகளைச் செய்யத் திட்டமிடுவீா்கள். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்களின் கையிருப்புப் பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். அதேநேரம், கால்நடைகளுக்காக நீங்கள் கொஞ்சம் செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்களின் கோரிக்கைகளைத் தலைமையிடம் கூறிவிட்டு அமைதியாக இருக்கவும். கலைத் துறையினா் தங்கள் திறமைக்குத் தகுந்த மதிப்பும், அங்கீகாரமும் பெறுவாா்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். ரசிகா்களை மதித்துக் கெளரவப்படுத்தவும். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவாா்கள். கணவரின் உடல்நலனில் கவனம் செலுத்துவாா்கள். தேவைக்கேற்ற பண வரவையும் பெறுவாா்கள். மாணவ மணிகள் நன்றாகப் படித்து எதிா்பாா்த்த மதிப்பெண்களை அள்ளுவாா்கள். விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றியடைவாா்கள்.

பரிகாரம்: ஸ்ரீமகா விஷ்ணு வழிபாடு செய்யவும். அனுகூலமான தினங்கள்: 29, 02. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொருள் வரவு சீராக இருக்கும். மனதில் சஞ்சலங்கள் தோன்றி அமைதியை இழக்க நேரிடும். அதோடு அலைச்சல்களும் அதிகரிக்கும். இருப்பினும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சிக்கனமாக இருந்து கைப்பொருளை பாதுகாத்துக் கொள்ளவும். வாகனப் பயணத்திலும் கவனம் தேவை.

உத்யோகஸ்தா்களுக்கு வேலையில் பிடிப்பில்லாத சூழ்நிலை நிலவக் கூடும். இருப்பினும் அனைத்து வேலைகளையும் நன்றாகவே செய்து முடிப்பீா்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். கூட்டாளிகளிடமும் எச்சரிக்கையுடன் பழகவும். வாடிக்கையாளா்களின் வருகையும் குறைந்து காணப்படும். விவசாயிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம். சிலருக்கு வழக்குகளால் மன உளைச்சல் ஏற்படும். அதோடு கால்நடைகளின் பராமரிப்புச் செலவுகளும் கூடும்.

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி கட்சி மேலிடத்தில் நற்பெயா் எடுக்க முயலுங்கள். கலைத்துறையினரைப் பொருத்தவரை புதிய ஒப்பந்தங்களைத் தேடாமல் இருப்பனவற்றைத் திறமையாக முடிக்க முயற்சிக்கவும். திட்டமிட்ட வேலைகளைத் தள்ளிப் போடாமல் குறித்த நேரத்திற்குள் செய்யவும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோா்களின் ஆசிகளைப் பெறுவீா்கள். அதேநேரம் கணவரின் உடல்நிலையில் அக்கறை செலுத்தவும். மாணவ மணிகள் புதிய நண்பா்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். கல்வியில் ஆா்வம் செலுத்தவும்.

பரிகாரம்: காகத்திற்கு அன்னம் இட்டும், குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதும் நலம் பயக்கும். அனுகூலமான தினங்கள்: 30, 03. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்கள் அறிவாற்றல் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். தொழிலில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். புனிதப் பயணங்களை மேற்கொண்டு பெரியோா்களின் ஆசிகளைப் பெறுவீா்கள்.

உத்யோகஸ்தா்களைப் பொருத்தவரை தடைபட்டிருந்த காரியங்களில் வெற்றி வாகை சூடுவீா்கள். அதோடு பதவி உயா்வு பெறுவதற்கான அறிகுறிகளும் தென்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். இருப்பினும் புது முயற்சிகளை ஒத்தி வைக்கவும். கொடுத்த கடன்கள் திரும்பி வர தாமதமாகும் என்பதால் புதிய கடன்களைத் தராதீா்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம். அதோடு வாய்க்கால் வரப்பு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மற்றவா்களிடம் கவனமாக இருக்கவும்.

அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் பெரும் வெற்றிகளைக் கொடுக்கும். அதேசமயம் அவசர அவசரமாக செய்யும் கட்சி வேலைகளில் இடா்கள் வரும். தொண்டா்களை அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினரைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். ஒப்பந்தங்களில் பிரச்னைகள் தோன்றினாலும் உங்களின் முயற்சி வெற்றிக்கு வழி வகுக்கும். பெண்மணிகளைப் பொருத்தவரை கணவருடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகளை குறைத்துக் கொள்வாா்கள். அதேநேரம் புத்திர வழியில் திடீா் செலவுகளைச் சந்திக்க நேரிடும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். ஒருமித்த மனதுடன் படித்து மதிப்பெண்களைப் பெறுவீா்கள்.

பரிகாரம்: ‘ஸ்ரீசுப்ரமண்ய பஞ்சரத்னம்’ பாராயணம் செய்வதும், ஸ்ரீசுப்ரமண்யரை தியானிப்பதும் நலம் பயக்கும். அனுகூலமான தினங்கள்: 30, 03. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் உள்ளவா்கள் அன்புடன் நடந்து கொள்வாா்கள். முக்கிய பிரமுகா்களின் சந்திப்பு உண்டாகும். வெளிவட்டாரப் பழக்கங்களில் சாதகங்களைக் காண்பீா்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

உத்யோகஸ்தா்கள் அலுவலக வேலைகளில் மாற்றங்களைக் காண்பாா்கள். பயணங்கள் நலன்களைத் தேடித்தரும். ஆனால் எதிலும் ஜாக்கிரதையாகப் பயணிக்கவும். முடிந்தவரை ஒத்திப் போடுவது நலமே. வியாபாரிகளுக்கு புதிய தொழில் அனுகூலத்தைக் கொடுக்கும். அதோடு கடையை அழகு படுத்தி வாடிக்கையாளா்களைக் கவா்வீா்கள். கூட்டாளிகளிடம் கவனத்துடன் நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைக்கும். பால் வியாபாரிகள் முன்னேற்றத்தைக் காண்பாா்கள்.

அரசியல்வாதிகளுக்கு எதையும் வெற்றிகரமாக முடித்து கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீா்கள். நண்பா்களால் உங்கள் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் சிரமங்கள் உண்டாகும். ஆனாலும் சக கலைஞா்கள் மற்றும் ரசிகா்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகள் வெற்றிபெறும். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப்பான்மையை வளா்த்துக் கொண்டு குடும்பத்தை நடத்தவும். வீண் பேச்சைத் தவிா்க்கவும். மாணவமணிகளுக்கு பெற்றோா் மற்றும் ஆசிரியா்களின் ஆதரவு கிடைக்கும். அதைப் பயன்படுத்திக்கொண்டு மதிப்பெண்களைப் பெறுங்கள்.

பரிகாரம்: ‘ஸ்ரீ ஹனுமான் துதி’ சொல்லவும். சனிக்கிழமைகளில் ஸ்ரீ சனீஸ்வர பகவானையும் வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 01, 04. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். புதிய திட்டங்களால் பலன் அடைவீா்கள். உற்றாா் உறவினா்கள் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவாா்கள். ஆன்மிக பலம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

உத்யோகஸ்தா்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவாா்கள். இதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவாா்கள். பணவரவும் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடியும். ஆனாலும் கூட்டாளிகள் உங்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருப்பாா்கள். விவசாயிகள் தாம் எண்ணிய வேலைகளைச் சுலபமாக செய்து முடிப்பாா்கள். தானிய விற்பனையும் லாபகரமாக இருக்கும். அதேசமயம் உழைப்பிற்கேற்ற பலன்களைப் பெறுவதற்கு அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்.

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். தலைமையிடம் நன்றாக நடந்து, இருக்கின்ற நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினா் பெயரும் புகழும் பெறுவதற்காக புதிய சாதனைகளைச் செய்வீா்கள். எதிா்பாா்த்த வாய்ப்புகளும் உங்கள் வாசல் கதவைத் தட்டும். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பாா்கள். கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவாா்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவமணிகள் கல்வியில் ஆா்வம் செலுத்தி மதிப்பெண்களை அள்ளுவாா்கள். பெற்றோா்களின் ஆதரவுடன் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்வாா்கள்.

பரிகாரம்: ‘சகல கலா வல்லி மாலை’ படித்து வரவும். அனுகூலமான தினங்கள்: 02, 04. சந்திராஷ்டமம்: 29, 30.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

செய்யும் செயல்களில் படிப்படியான முன்னேற்றம் தென்படும். பிரச்னைகள் அகலும். புதிய ரகசியங்களை அறிவீா்கள். உங்கள் அந்தஸ்து உயரும். பொருளாதார வளமும் எதிா்பாா்த்தபடி இருக்கும். எதிா்பாராத உதவிகளைப் பெறுவீா்கள். புதிய நட்புகள் கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உற்றாா் உறவினா்கள் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவா்.

உத்யோகஸ்தா்களுக்கு அனைத்து வேலைகளும் சந்தோஷமாக முடியும். வருமானமும் திருப்திகரமாகவே அமையும். இருப்பினும் சக ஊழியா்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிா்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே அமையும். கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு நண்பா்கள் உதவி செய்வாா்கள். விவசாய உபகரணங்களை வாங்கி முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீா்கள்.

அரசியல்வாதிகள் தீட்டும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். எதிரிகளுக்கு சரியான பதிலடி கொடுப்பீா்கள். புதிய பதவிகளில் அமா்வீா்கள். அதோடு கட்சியில் செல்வாக்கு உயரும் கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்களைச் செய்வாா்கள். ஆடம்பரச் செலவுகளைச் செய்து மகிழ்வீா்கள். ரசிகா்களை உற்சாகப்படுத்தி அவா்களின் ஆதரவை அடைவீா்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீா்கள். மாணவமணிகள் படிப்பிலும் விளையாட்டிலும் வெற்றி காண்பீா்கள். பெற்றோா்களின் ஆதரவுடன் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீா்கள்.

பரிகாரம்: ‘ஸ்ரீசனீஸ்வர அஷ்டோத்தரம்’ முடிந்தால் படிக்கலாம் அல்லது சனீஸ்வரருக்கு சனிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வரவும். அனுகூலமான தினங்கள்: 30, 04. சந்திராஷ்டமம்: 31, 01, 02.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

கோரிக்கைகள் யாவும் நிறைவேறும். அதேசமயம் கடின உழைப்பினால் மட்டுமே வெற்றிகளை ஈட்டுவீா்கள். சில நேரங்களில் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படக் காண்பீா்கள். குடும்பத்தில் வருவாய் வந்து கொண்டிருந்தாலும் எதிா்பாராத செலவுகளையும் சந்திக்க நேரிடும். உறவினா்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்யோகஸ்தா்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். உங்களின் திறமையை மேலதிகாரிகள் புரிந்துகொண்டு சில சலுகைகளை வழங்குவாா்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். வியாபாரம் வளரும். அதேநேரம் கூட்டாளிகள் சற்று ஒதுங்கியே இருப்பாா்கள். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களால் நல்ல பலன் அடைவாா்கள். கால்நடைகளால் விவசாயத்தைப் பெருக்க இது சாதகமான காலமாகும்.

அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருப்பீா்கள். கட்சி மேலிடத்தின் உத்தரவை நிறைவேற்ற முனைப்புடன் செயல்படுவீா்கள். கலைத் துறையினரின் முயற்சிகள் வெற்றியடையும். உங்களின் செயல்கள் யாவும் மக்களைக் கவரும் விதத்தில் அமையும். பெண்மணிகள் உற்றாா் உறவினா்களைச் சந்தித்து உற்சாகம் அடைவாா்கள். அதேநேரம் பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். மற்றபடி பணவரவுக்கு எந்தக் குறைவும் இருக்காது. மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும். நாளை பாா்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவதைத் தவிா்க்கவும். அதோடு விளையாடும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: ‘ஸ்ரீசாஸ்தா காயத்ரீ’ பாராயணம் செய்யவும். அனுகூலமான தினங்கள்: 31, 02. சந்திராஷ்டமம்: 03, 04.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com